மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அளித்தபதிலில் கூறியிருப்பதாவது:
ஒருகோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில், பெண்களுக்கென தனியாக பிங்க்பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களில் ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் என அனைவரும் பெண்களாகவே இருப்பர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
இதன்படி, சில நகரங்களில் ஏற்கெனவே இந்தவகை பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை வெற்றிகரமாக செயல்படுகின்றன.
டெல்லியில் அனைத்து புதியபஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கும். மேலும் 2 மற்றும் 3 சக்கர மின்சார வாகனங்களுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட பட்டுள்ளது. இந்தவகை வாகனங்கள் பெண்களின் போக்குவரத்துக்காக பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |