கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம்

கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனைதடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வேலைசெய்ய வேண்டும். கொரேனா வைரஸ் நம்மை ஒன்றும்செய்யாது என எண்ண வேண்டாம். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம். மக்களுக்காக , மக்களே சுயமாக ஊரடங்கு நடை முறையை பின்பற்றுவோம்.

22 ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டின் முன்னால் அத்தியாவசிய சேவை செய்வோருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். கொரோனா வைரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் அன்று இந்தியாவின் சோதனை ஓட்டமாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்கிகுவிக்க வேண்டாம்.தேவையின்றி மருத்துவமனைகளில் குவியாமல் பதற்றத்தை தவிர்க்கவேண்டும். மக்கள் விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும். அலட்சியம் கூடாது.கொரோனா வரைஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது.மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மிகமுக்கியம்.

கடந்த இரண்டு மாதங்களாக பெரும் கவலையோடு உலகம் முழுக்க இதுபரவி வருவதை நாம் பார்த்துவருகிறோம். உலகம் தற்போது மிகப்பெரிய சிக்கலை கடந்து கொண்டு இருக்கிறது. முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப் போரை விடவும் அதிகப்படியான நாடுகள் இந்த வைரஸால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

ஒரு வைரஸ் காரணமாக இத்தனை நாடுகள் பாதிக்கப்படுவது என்பது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டிய காலகட்டம் இது. எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் வருகிறதோ, அப்போதெல்லாம் ஒருகுறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும்தான் அதுபாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 130 கோடி பேரும் கொரோனாவுக்கு எதிரானபோரை முன்னெடுக்க வர வேண்டும். சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற சமூக இடைவெளியை நாம் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம்.

அத்தியாவசிய சேவையை செய்பவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுகிழமை வெளியே வரவேண்டாம். மருத்துவர்கள் ஊடகத்துறையினர் போக்குவரத்து துறையினருக்கு மற்றவர்கள் தொந்தரவு தரவேண்டாம். நோய்க்கு ஆளாகாதீர்கள் .நோய்களை பரப்பாதீர்கள் . பொருளாதார மந்தநிலையை போக்குவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஆலோசனைகுழு அமைக்கப் பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி கூறுங்கள்.

கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...