தமிழகத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு

த்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நிதிஒதுக்கி உள்ளது.

நாடெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாகப் பல மாநிலங்களில் பணி இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சக் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இவர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு உதவிஅளிக்கும் எனப் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ”கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை சுகாதார பணிகளுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு முதல் கட்டமாக ரூ.2570 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ. 987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு ரூ.431 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

One response to “தமிழகத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...