வீட்டில் இருந்தபடியே தடுப்பு பணிகளை உன்னிப்பாக கவனிக்கும் மோடி

“நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 5 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 பேருடன் தொலைபேசியில் பேசி ஊரடங்கைய…

நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 5 நாட்கள் கடந்தநிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 பேருடன் தொலை பேசியில் பேசி ஊரடங்கையும் கொரோனா நிலவரத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார் . இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், எண் 7, லோக்கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தைவிட்டு பிரதமர் மோடி இதுவரை வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து அலுவலகங்களும் இங்கேயேஉள்ளது.. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத்தை தனதுபணிக்காக அதிகமாகப் பயன்படுத்துகிறார். ஊரடங்கு அறிவித்தபின், பிரதமர் மோடி வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார் என்றார்கள்.

 

பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா ஒவ்வொருநாளும் பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு வருகிறார். அமைச்சரவை செயலாளர் ராஜிவ்கவுபாவும் வருகிறார். மேலும், மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையிலான அமைச்சர்கள் குழுவும் சந்திக்கிறது. சர்வதேச தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களிடமும் அவ்வப்போது பிரதமர் பேசிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கபட்டுள்ளது. பிரதமரை பாதுகாக்கும் சிறப்புபாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று நோயை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று நாடுமுழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரபணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம்வைத்து சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று தனது மான் கி பாத் உரையில் வெகுவாகபாராட்டி பேசியதுடன் அவர்களை போர்வீரர்கள் என்று குறிப்பிட்டார்.

இதுவரை கொரோனா வைரஸ் விவகாரத்தில் மூன்றுமுறை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். முதல் முறையாக மக்கள் ஊரடங்கை சோதனை முறையில் நடத்தவேண்டும் என்று பேசினார். இரண்டாவது முறை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து அதற்கான காரணத்தை விளக்கினார். மூன்றாவது முறையாக நேற்று வானொலி நிகழ்ச்சியில் பேசியபிரதமர் மோடி, ஊரடங்கை அறிவித்ததற்காக மன்னிப்புகேட்டார். அத்துடன் ஊரடங்கை தவிர கொரோனாவை தடுக்க வேறுவழியில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார். பிரதமர் வீட்டில் இருந்தபடியே கொரோனா தடுப்பு பணிகளை தற்போது உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...