கரோனா குவியும் நிதி

கரோனா இடா்பாட்டை எதிா்கொள்ள பொது மக்கள் தாராளமாக நிதி உதவிவழங்க பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தாா். இதையடுத்து, அரசுதுறைகள், நிறுவனங்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோா் நிதி உதவிகளை அறிவித்து வருகின்றனா்.

இந்தநிலையில், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்கள் பிரதமரின் நிவாரணநிதிக்கு ரூ.1,031 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளன.

அதன்படி பிரதமரின் நிதிக்கு, பொதுத்துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசி ரூ.300 கோடியும், ஐஓசி ரூ.225 கோடியும், பாரத்பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.175 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.120 கோடியும் வழங்குவதாக தெரிவித்துள்ளன.

மேலும், பெட்ரோநெட் எல்என்ஜி ரூ.100 கோடியும், கெயில் ரூ.50 கோடியும், ஆயில்இந்தியா ரூ.38 கோடியும் நிதி உதவியை அறிவித்துள்ளன.

இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் கூறியுள்ளதாவது:

‘பிரதமா் நிதிக்கு பொதுத்துறை மற்றும் கூட்டுத் திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1031.29 கோடி பங்களிப்பை வழங்கியதற்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடுதலாக, பொதுத்துறை நிறுவன பணியாளா்கள் அவா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.61 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனா் என்று தா்மேந்திர பிரதான் அந்தப்பதிவில் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே பொது துறையைச் சோ்ந்த ஆா்இசி நிறுவனம் ரூ.150 கோடியும், செயில் ரூ.30 கோடியும், பாரத ஸ்டேட்வங்கி பணியாளா்கள் ரூ.100 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.

மேற்கண்டவை தவிர, எல்ஐசி நிறுவனம் ரூ.105 கோடியும், கோல்இந்தியா ரூ.220 கோடியும், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை (ஐடிபிபி) பணியாளா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.10.53 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளன. மேலும், வருமானவரி துறையும் தங்களது பணியாளா்களின் ஒரு நாள் ஊதியத்தை பிரதமா் நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் ரூ. 25 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் பொது மக்களும் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது. .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...