அமெரிக்காவில் 50 மாகாணங்களும் பேரழிவுப் பகுதிகளென அறிவிப்பு!

கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும் அமெரிக்காவில் வியோமிங் மாகாணத்தையும் பேரழிவுப்பகுதியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பதன் மூலம், அந்நாட்டின் 50 மாகாணங்களும் பேரழிவுப்பகுதியாக அறிவிக்கபட்டுள்ளது.

உலகளவில் 18 லட்சம் பேரை கரோனா தொற்று பாதித்துள்ளது. இது வரை 11 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இது வரை 5 லட்சத்து 60 ஆயிரம்பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தொட்டு விட்டது.

கரோனா தொற்றால் உலகிலேயே மிகவும் பாதிக்கபட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. பாதிப்பிலும், உயிர்பலியிலும் அமெரிக்காவே முதல்இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கரோனாதொற்று பாதித்து உயிரிழப் பவர்களின் எண்ணிக்கை ஐந்து நாள்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. அதாவது ஐந்து நாட்களுக்கு முன்பு 10 ஆயிரமாக இருந்தபலி எண்ணிக்கை, தற்போது 20 ஆயிரத்தை எட்டிவிட்டது.

இந்நிலையில், கரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தில் முதல் முறையாக பேரழிவு மாகாணமாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு மாகாணங்களாக பேரழிவு மாகாணங்கள் பட்டியலில்சேர்ந்தன. கடைசியாக வியோங் மாகாணத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரழிவு மாகாணமாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அனைத்து 50 மாகாணங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கபட்டுள்ளன.

அமெரிக்காவில் இயற்கை பேரழிவுகளின்போதும், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் போதும், ஒருசில மாகாணங்கள் மட்டுமே பேரழிவுப்பகுதியாக அறிவிக்கப்பட்டது உண்டு. ஆனால், இது தான் முதல் முறை, 50 மாணாங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்க பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அனைத்து மாகாணங்களும் அதிபரின் பேரழிவுப் பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான போரில் நாம் வென்றுவருகிறோம். விரைவில் முழுவதும் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...