நவாஸ் கனி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

12/04/2020 அன்று ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நவாஸ் கனி அளித்த அறிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 11 நபர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது என்று கூறி ஒரு பொது அறிக்கையை வெளியிட்டார். இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவை சேர்ந்த 11 நபர்களும் இந்தியா வந்து இந்திய அரசின் முறையான அனுமதியின்றி இஸ்லாத்தை பரப்புவதற்காக ராமநாதபுரத்திற்கு வந்துள்ளனர் என்று கூறுவது பொருத்தமானது. அவர்கள் இந்தோனேசி யாவிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து விசா விதிமுறைகளை மீறி மத பிரச்சாரம் செய்துள்ளனர். எனவே வெளிநாட்டினர் சட்டத்தின் தொடர்புடைய விதிகளை மீறும் குற்றத்தைச் செய்துள்ளனர்.மாநில காவல் துறை நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்தோனேசியாவை 11 நபர்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறி மாநில அரசு மற்றும் மாநில காவல்துறைக்கு எதிராக நவாஸ் கனி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றாலும், இந்தோனேசியாவை சேர்ந்த 11 நபர்கள் விசா விதிமுறைகளை மீறியுள்ளதும், அவர்கள் இந்தியாவில் இஸ்லாத்தை திரு.நவாஸ்கனி அவர்களின் சொந்த ஊர் பகுதியிலேயே பிரச்சாரம்செய்து வந்ததும் அவருக்கு நன்கு தெரியும்…

இந்தோனேசியாவைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட 11 நபர்கள் மீது முறையான வழக்குபதிவு செய்ததில் காவல் துறையின் நடவடிக்கை குறித்து திரு.நவாஸ்கனி கேள்வி எழுப்பியுள்ளார்.

திரு.நவாஸ்கனி குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதோடு, இந்திய அரசிடமிருந்து எந்த ஒரு சட்டரீதியான அனுமதி இல்லாமல் தமிழகத்தில் மதப்பிரச்சாரம் செய்த
இந்தோனேசியாவை சேர்ந்த 11 நபர்கள் செய்த குற்றங்களுக்கு நவாஸ் கனி சமமாக பொறுப்பேற்கிறார்,

மேலும் சட்டவிரோதமாக அவர்களை பாதுகாப்பதன் மூலம் அவர்களுடன் சேர்ந்து சதி செய்துள்ளார் மேலும் சட்டவிரோத செயல்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினராக தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்..

இவரது அறிக்கை பல்வேறு செய்தித்தாள் நாளிதழ்கள்,மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியா,தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து காலம் காலமாக மதப்பிரசாரத்திற்கு இராமநாதபுரம் மாவட்டத்திற்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருவது அனைவரும் அறிந்ததே..இது கடந்த காலங்களில் பலவகுப்புவாத மோதல்கள் காணப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கக் கூடும்.

நவாஸ்கனியின் செயல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் சட்டவிரோத செயல்களை ஆதரிப்பதிலும், அவர்களுடன் சதிசெய்து செயல்படுவதன் மூலமும், இந்தியாவில் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு உடந்தையாக இருந்தன் மூலமும், இனவாத அறிக்கைகளை வழங்குவதன் மூலமும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க செய்த தேசத்துரோக செயலாகும்.

அவர் வெளியிட்ட அறிக்கை செய்திகளைப் படித்தபிறகு, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பொது அமைதி யின்மைக்கு பங்கம் விளைவிப்பதை போன்ற சூழ்நிலை நிலவுகிறது..

இவ்வாறு தொடர்ந்து தனது பாரளுமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டும்,குற்ற செயலில் ஈடுபடுவோரை ஆதரித்தும்
செயல்பட்டு சமூக அமைதியை கெடுத்து வரும் திரு.நவாஸ் கனி மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படா விட்டால், ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும். எனவே திரு நவாஸ் கனி மீது வழக்கு பதிவு செய்து விரைவாக விசாரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாரளுமன்ற சபாநாயகர்,உள்துறை அமைச்சகம் பிற துறைகளுக்கு வலியுறுத்தி இருக்கின்றேன்..

நன்றி

தாயக பணியில்
து.குப்புராமு
மாநில துணைத்தலைவர்
பாஜக – தமிழ்நாடு

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...