இந்தியா – நேபாளம் இடையிலான உறவு கலாச்சார ரீதியானது

நேபாளத்துடன் பிரச்சினை களுக்கு பேச்சு வார்த்தை மூலம் சுமூகதீர்வு காணப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள சிலபகுதிகளையும் சேர்த்து நேபாளம் உருவாக்கியுள்ள புதிய வரைபடத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் சனிக் கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு இந்தியா கடும்கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்துக்கான மக்கள்சந்திப்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத்சிங் காணொலிகாட்சி மூலம் நேற்று பேசியதாவது:

இந்தியா – நேபாளம் இடையிலான உறவு வரலாற்று, கலாச்சார ரீதியானது மட்டுமின்றி, ஆன்மீக ரீதியாகவும் இருநாடுகளுக்கும் இடையே உறவு உள்ளது. இதை இந்தியா மறக்காது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உலகின் எந்தசக்தியாலும் பிரிக்க முடியாது.

உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து லிபுலேக் கணவாய் வரை நமது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் இந்தியா சாலை அமைத்துள்ளது. இந்தசாலை அமைத்தது தொடர்பாக நேபாள மக்களுக்கு தவறானபுரிதல் இருந்தால் அந்நாட்டுடன் பேசுவோம். நேபாளத்துடன் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்படும். நேபாளம் குறித்து இந்தியர்களுக்கு எந்த கசப் புணர்வும் இல்லை. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...