ஏமாற்றும் பூஜாரி லோன் அல்ல திருப்பி செலுத்தும் மோடி லோன்

தமிழக பாஜகவின் வங்கிக் கடன் உதவும் தாமரைத் திட்டத்தைப் பார்த்து திகிலடைந்த தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் திரு.K.S. அழகிரி அவர்கள், அதை எதிர்த்து பாஜகவை மிரட்டும் தொனியில், பாஜகவின் மீது வழக்கு தொடரப்போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அகராதியில் ஊழலுக்குப் பெயர் ப.சிதம்பரம் என்றும், கடன் பெற்று ஏமாற்றுவதற்காகவே ஒரு திட்டம் “பூஜாரி லோன்” என்றும் பெயரெடுத்த காங்கிரஸ் கட்சி மிரட்டுவது ஆச்சரியமில்லைதான்.

இது திருப்பித் தராமல் ஏமாற்றிய பூஜாரி லோன் அல்ல…. பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தி திருப்பிச் செலுத்தும் மோடி லோன் …. தகுதியுள்ள, திருப்பிச் செலுத்தும் யாராக இருந்தாலும், பாஜக உதவும் – காங்கிரசும் உதவலாமே!

காங்கிரஸ் எப்போதும் ஒரு வழிப்பாதை – வாங்கித்தான் பழக்கம் – திருப்பிச் செலுத்தி பழக்கமில்லை – அதனால்தான் இந்த ஒப்பாரி. உதவும் எண்ணம் காங்கிரஸ் அகராதியிலேயே கிடையாது. எனவே காங்கிரஸ் இதுவரை உதவியதில்லை. ஆனால் உதவுபவரை தடுப்பதையும், குற்றம் சொல்வதையும் இதுவரை அக்கட்சி நிறுத்தவில்லை.

தமிழ்நாட்டில் பார்லிமெண்ட் தேர்தலில், காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்கியிருக்காது. இது அழகிரிக்கும் தெரியும். மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுக தோளில் சவாரி செய்தது. தற்போது திமுகவின் காலடியில் கிடந்து சில MP சீட்களில் ஜெயித்திருக்கிறது.

தன்னை அறியாமலே திரு அழகிரி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். காங்கிரஸ் தந்த கல்விக்கடன் ஊழல் பற்றி நாடறியும்.காங்கிரஸ் புரோக்கர்களால் கல்விக்கடன் தகுதியில்லாதவர்கள் மற்றும் போலி நபர்களுக்கு தரப்பட்டு ,கடன் திரும்பச் செலுத்தபடாமல் போனது.அதே மாதிரி பாஜக செல்லவேண்டும் என்கிறார் அழகிரி. காங்கிரசின் ஊழல், லஞ்ச லாவண்ய கலாச்சாரத்தை பாஜக ஒரு போதும் தத்தெடுக்காது.

என்றும் தேசப் பணியில்
(எஸ்.ஆர்.சேகர்)

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...