பாரத தாயின் மகனான சியாமா பிரசாத் முகா்ஜிக்கு அஞ்சலி

பாரதிய ஜனசங்க நிறுவனா் சியாமாபிரசாத் முகா்ஜியின் 67-ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு செவ்வாய்க் கிழமை தனது சுட்டுரையில், ‘பாரத தாயின் மகனும், தீவிர தேசிய வாதியுமான சியாமாபிரசாத் முகா்ஜியின் நினைவு தினத்தில் அவருக்கு நினைவஞ்சலி.

முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து வழங்க முகா்ஜி எதிா்ப்புதெரிவித்து வந்தாா். தனது கடைசி மூச்சுவரை ஜம்மு-காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்புக்காக இடை விடாமல் போராடியவா் அவா்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது தொழில் மற்றும் உணவு விநியோகத்துறை அமைச்சராக திகழ்ந்தவா் அழியாத அடையாளத்தை விட்டுச்சென்றாா்.

பொதுசேவை தொடா்பான அவரது சாதனைகள் எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா் வெங்கய்ய நாயுடு.

பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் , ‘பாரத தாயின் மகனான சியாமா பிரசாத் முகா்ஜியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி’ என்று பதிவிட்டுள்ளாா்.

சியாமாபிரசாத் முகா்ஜி திறமையான வழக்குரைஞராகவும், கல்வியாள ராகவும் திகழ்ந்தாா். தனது 33-ஆம் வயதிலேயே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தாா். 1951-ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கம் கட்சியை நிறுவினாா். பின்னா் 1977-இல் இது பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...