நெருக்கடி மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு இப்போதும் அகல வில்லை

நெருக்கடி மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு இப்போதும் அகல வில்லை,. ஒரு குடும்பத்தின் நலன் தான் காங்கிரஸ் கட்சியின் நலனாகவும், தேசத்தின் நலனாகவும் உள்ளது.45 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான், ஒருநாள் இரவில் இந்ததேசம் சிறைச்சாலையாக மாறியது .

இந்த காலக்கட்டத்தில் பத்திரிகை, நீதிமன்றம், பேச்சுசுதந்திரம், அனைத்தும் காலில்போட்டு மிதிக்கப்பட்டன. ஏழைகள், விளிம்புநிலைச் சமூகத்தில் இருப்பவர்கள் மீது அட்டூழியங்களும், அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. பலலட்சம் மக்களின் மிகப்பெரிய முயற்சிகளால் தேசத்தில் அவசரநிலை நீக்கப்பட்டு, ஜனநாயகம் மீண்டது. ஆனால், இன்னும் காங்கிரஸ் கட்சியில் இன்னமும் ஜனநாயகம் இல்லாமல் தான் உள்ளது.

ஒரு குடும்பத்தின் நலன்தான் காங்கிரஸ் கட்சியின் நலனாகவும், அதுவே தேசத்தின் நலனாகவும் இருந்தது. இந்தகவலை தரும் நிலை இன்றும், இன்றைய காங்கிரஸில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் அண்மையில் நடந்தது அதில் மூத்த தலைவர்கள், இளம்தலைவர்கள் சிலப் பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறார்கள் ஆனால், அவர்கள்பேச்சு கவனிக்கப்பட வில்லை. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மரியாதையின்றி நீக்கப்பட்டார். வேதனைக்குரிய உண்மை என்னவென்றால், காங்கிரஸில் உள்ள தலைவர்கள் தங்களால் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்க முடியவில்லை. அதற்கு சுதந்திரம் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.

ஏன் எமர்ஜென்சி மனநிலையில் இன்னும்இருக்கிறோம் என இந்தியாவின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ்கட்சி, தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொள்வது அவசியம்

ஒருகுடும்பத்தின் வாரிசுகளை தவிர மற்ற தலைவர்களால் ஏன் கட்சிக்குள் பேச முடியவில்லை என்பதை காங்கிரஸ் கேட்கவேண்டும்? காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் ஏன் மனம் வெறுக்கிறார்கள் என்று அந்தகட்சி தனக்கு தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.? மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான இடைவெளி அதிகரித்து கொண்டே செல்கிறது இதுபற்றி அந்தகட்சி கேட்கவேண்டும்?”. இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றிபெற்றது செல்லாது என்று அவரது எம்பி பதவியை பறித்து அலகபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி உறுதி செய்தது. எனினும் இந்திரா காந்தியை பிரதமராக தொடர உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

அதற்கு மறுநாள் ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. நாட்டில் அவசரநிலை 1975 ஜூன் 25-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதிவரை அமலில் இருந்தது.

இந்த காலக்கட்டத்தில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது. கருத்து  சுதந்திரம் பறிக்கப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசை விமர்சிப்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்திய வரலாற்றில் கறுப்பு நாட்களாக இந்த அவசர நிலை பார்க்கப்படுகிறது. இந்நிலையில். நாட்டில் அவசர நிலை கொண்டுவந்து இன்றோடு 45 ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...