59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான பெரிய தாக்கு

சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்து இந்தியா சீனாவிற்கு இருக்கும் செக் வைத்துள்ளது.

டிக்டாக் – TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் – UC Browser, ஹெலோ – Helo, எம்ஐ கம்யூனிட்டி – Mi Community, செண்டர் – Xender உள்ளிட்ட சீனாவை சேர்ந்த 59 செயலிகளும்    தடை செய்யப்பட்டுள்ளது

சீனாவிற்கு இதுபெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. லடாக் சண்டை நிலவி வரும் நிலையில் இப்படி சீனாவின் செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ் இது என்று கூறுகிறார்கள்.

இப்படி செயலிகளை தடைசெய்ததன் மூலம் சீனாவில் பலகோடி இழப்பு ஏற்பட போகிறது. உதாரணமாக டிக்டாக் என்ற செயலிமட்டுமே 100 கோடி பயனாளர்களை உலகம்முழுக்க கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமான கணக்குகள் இதில் உள்ளது. தடைகாரணமாக இந்த வருமானம் இன்னும் சில நாட்களில் டிக்டாக்கிற்கு இல்லாமல் போகும். இதேபோல் ஷேர் இட் தொடங்கி ஹலோ வரை எல்லா செயலிகளும் மிகமோசமான பொருளாதார சரிவை சந்திக்கும்.

அந்த செயலிகள் மட்டுமின்றி சீனாவின் மொத்த ஜிடிபியும் இதனால் பாதிக்கும். சீனா தனது வருமானத்திற்காக தொழிநுட்ப செயலிகளை பெரியளவில் நம்பி இருக்கிறது. அந்த நாட்டின் ஜிடிபியில் இது நான்காவது பெரியபங்களிப்பை தருகிறது. அதிலும் இந்தியாவின் 100 கோடி பயனாளிகள் சீனாவிற்கு மிகமுக்கியமான சந்தையாக உள்ளது. அதாவது டிக் டாக் மட்டும் வருடத்துக்கு 1 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் உடையது. இதில் பெரும்பங்கு வகிப்பது இந்திய இவர்கள் சீன செயலிகளை புறக்கணித்தால், அந்த நாட்டில் வளர்ந்துவரும் ஒரு துறையே மொத்தமாக காலியாகும் நிலைமை ஏற்படும்.

இன்னொரு பக்கம் இந்தியா போன்ற பெரியநாடு சீனாவின் செயலிகளை தடைசெய்தால் மற்ற நாடுகளும் சீனாவின் செயலிகளை தடைசெய்ய முன்வரும். சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா கோபத்தில் இருக்கிறது. இதனால் அமெரிக்காவும் கூட சீனாவின் செயலிகளை தடைசெய்யலாம். ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரம் டிக்டாக் மூலம் நாசமாகிவிட்டதாக டிரம்ப் கோபத்தில் இருக்கிறார்.

அங்கு அதிபர் டிரம்பிற்கு எதிராக டிக்டாக்கில் சீனர்கள் தொடங்கி பலர் மிகதீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் டிக் டாக் செயலுக்கு தடைவிதிக்கலாம். அதேபோல் ஆஸ்திரேலியாவில் சீன ஹேக்கர்கள் அடுத்தடுத்து ஹேக்கிங் செய்ததும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் சீனாவின் சந்தைமீது கடும் கோபத்தில் இருக்கிறது.

இன்னொரு பக்கம் சீனா இந்திய மக்களின் டேட்டாக்களை திருட முடியாது. இந்தியர்களை டேட்டாக்களை வைத்துதான் இந்திய சந்தையில் தொடர்ந்து சீனா பொருட்களை விற்று வருகிறது. சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. இது போன்ற செயலிகள் மூலம்தான் இப்படி சீனா தொடர்ந்து இந்தியாவில் டேட்டாக்களை பெற்று சந்தையை விரிவாக்குகிறது. தற்போது அந்த அஸ்திரத்தை இந்தியா உடைத்துள்ளது.

அதேபோல் இதுபோன்ற டேட்டாக்களை வைத்துதான் உலகின் பிறநாடுகளில் ஹேக்கிங் வேலைகளை செய்துவருகிறது. இதை இந்தியா தடுத்துள்ளது. உலகம் முழுக்க இப்படி சீனா தனது செயலிகளை விரிவுபடுத்தி உள்ளது. ஆனால் சீனாவிற்குள் மற்ற நாடுகளின் செயலிகளுக்கு அனுமதி இல்லை. சந்தை என்பது இரட்டைவழியை கொண்டதாக இருக்க வேண்டும். பிறநாட்டில் செயலிகளை விடுவேன், என் நாட்டிற்குள் விடமாட்டேன் என்றுகூறுவது முழுக்க முழுக்க தவறானது. இதனால் சீனாவின் செயலிகளை தடைசெய்தது சரியான முடிவு என்கிறார்கள்.

ஒருநாட்டுக்கு எதிரான போர் என்பது ஆயுதங்களை மட்டும் ஏந்தி கொண்டு செல்லும் போர் கிடையாது. அது வர்த்தக ரீதியாகவும் செய்யப்படலாம். அதேபோல் இப்படி டெக்கினிக்கல் ரீதியாகவும் செய்யப்படலாம். இந்தியா ஆயுதம்இல்லாமலும் மிக மோசமாக தாக்கும் என்று இதன் மூலம் நிரூபித்து இருக்கிறது. சீனாவிற்கு கண்டிப்பாக இது பொருளாதார ரீதியாக பெரியதாக்குதலாக இருக்கும் என்கிறார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...