கறுப்பர்கூட்டம் தலைவன் செந்தில் வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கந்த சஷ்டி கவசம் பாடல்பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர்கூட்டம் தலைவன், மற்றும் திமுக ஐடி விங்குடன் தொடர்புடைய செந்தில் வாசனை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. கடவுள்கள் பற்றியும் மோசமான விமர்சனங்கள் அந்தசேனலில் வெளியிடப்பட்டிருந்தன. அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் சென்னை போலீஸ் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதுசெய்தனர். கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன. காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தையும் இந்து கடவுள்களையும் அவதூறாக பேசியவர்களையும் குண்டர்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுரேந்திரன் மீது நேற்று குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சுரேந்திரன் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளா சுரேந்திரன். இந்த நிலையில் செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளதால் ஜாமீனில் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுககூடாரம் அதிர்ந்து தவிக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...