முருகனை பற்றி தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி. நட்டாவை நேற்று நேரில்சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜகவில் சேரவில்லை என்றும் அதிரடியாக அறிவித்து திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தார். இதனையடுத்து திமுக.,விலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார் கு.க. செல்வம். மேலும் அவர்வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நீக்கினார். மேலும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நிரந்தரமாக நீக்கக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் திமுக தெரிவித்தது.

இந்நிலையில் நேற்றுமாலை சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடந்த ராமர்வழிபடும் நிகழ்ச்சிக்கு கு.க.செல்வம் சென்று பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், “பிரதமர் மோடி, பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் சட்டமன்ற உறுப்பினர் என்றமுறையில் அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின்தூக்கி கேட்டேன். தமிழகத்தில் வாரிசு அரசியல் நடக்கிறது. திமுக உட்கட்சி தேர்தலை நடத்தவேண்டும். முருகனை பற்றி தவறாக பேசியவர்களை திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை.” என்று பேசிவிட்டு சென்றார்.

கு.க. செல்வம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாமல், அதிருப்தி எம்.எல்.ஏ.வாக பாஜகசார்பாக தமிழக சட்டப் பேரவையில் குரல் கொடுக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் கு.க. செல்வத்தைத் தொடர்ந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த கோயில்தொகுதி திமுக எம்.எல்.ஏ. பாஜகவில் ஐக்கியமாக போவதாக செய்தி கசிகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...