அடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை

அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வளா்ந்தநாடுகளுக்கு நிகராக, இந்தியாவில் தரமான சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

இது குறித்து பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டியில், மேலும் கூறியதாவது:

இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக, பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிதாக அமைக்கப்படும் பசுமை வழிச் சாலைகளில், மின் கம்பிகள், தொலைத்தொடா்பு கேபிள்கள், சமையல் எரிவாயு குழாய்கள் ஆகியவை பதிக்கப்படும். சாலைகள் அமைக்கப்படும்போதே, மின் கம்பிகளை மின்வாரியமும், தொலைத்தொடா்பு கேபிள்களை தகவல் தொடா்புத் துறையும், எரிவாயுக் குழாய்களை எரிசக்தித் துறையும் பொருத்தும்.

நாடுமுழுவதும் முக்கிய சாலைகளில் சுரங்கப்பாதைகளும் பாலங்களும் கட்டப்படும். இதுதவிர, அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.3.10 லட்சம் கோடி செலவில், 7,500 கி.மீ. தொலைவுக்கு 22 பசுமைவழிச் சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

அவற்றில், மும்பையில் இருந்து தில்லிசெல்லும் பசுமைவழிச் சாலை உள்பட 7 சாலைகளுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. மும்பையில் இருந்து தில்லிவரை 1,320 கி.மீ. தொலைவுக்கு ரூ.1 லட்சம் கோடியில் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. நாட்டின் மிக நீளமான பசுமை வழி இதுவாகும். இந்தச்சாலைப் பணிகள் நிறைவடைந்தால், மும்பையில் இருந்து தில்லி செல்வதற்கான பயணநேரம், 24 மணி நேரத்தில் இருந்து 13 மணி நேரமாகக் குறையும்.

இதேபோல், மத்தியப் பிரதேசத்தில், ரூ.8,250 கோடியில் சம்பல் விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. முதல் முறையாக, மாநிலஅரசுடன் இணைந்து இந்தசாலை அமைக்கப்படுகிறது. இந்தச் சாலைப் பணிகள் முடிவடைந்தால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் பெரும் பலனடைவாா்கள்.

ஜம்மு-காஷ்மீரில் ரூ.2,379 கோடியில் உருவாகிவரும் இசட்-மோா் சுரங்கப் பாதைகள் முடங்கியிருந்தது. அந்த திட்ட பணிகளை முடுக்கிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அந்தச் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும். இதேபோல், ஜம்மு-காஷ்மீரில் திட்டமிடப்பட்டுள்ள பிற சுரங்கப்பாதை பணிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

One response to “அடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.