பெற்றோர், மாணவர்களின் தொடர் அழுத்தம் காரணமாகவே JEE ,NEET தேர்வு

பெற்றோர் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான அழுத்தம்காரணமாகவே JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகாரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் JEE மற்றும் NEET தேர்வுகள் ஜூலைமாதம் நடைபெறவிருந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. செப்டம்பர் 1 முதல் 6 வரை JEE தேர்வுகள் நடைபெறும் என்றும், செப்டம்பர் 13ம் தேதி NEET தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா மற்றும் நாட்டின் சிலபகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள சமயத்தில் இந்த தேர்வை நடத்தக் கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகத் தான் தொற்று நோய்க்கு மத்தியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான தேர்வை நடத்த முடிவெடுத்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘JEE தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களில் 80% பேர் ஏற்கெனவே அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துவிட்டார்கள். தேர்வை நடத்துமாறு மாணவர்களும், பெற்றோர்களும் அழுத்தம்கொடுத்தனர். இன்னும் எத்தனைகாலம் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற அச்சம் மாணவர்கள் மனதில் எழுந்தது. அதனால் அவர்கள் கவலையடைந்தனர். நாங்கள் மாணவர்களுடன் இருக்கிறோம். அவர்களது பாதுகாப்புதான் முக்கியம். அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்படும்’ என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...