ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொடர்பு; ரவீந்திர ரெய்னா

காஷ்மீர், :ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக கருத்துதெரிவித்த ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சல்களுடன் தொடர்பு இருக்கலாம் என, ஜம்மு – காஷ்மீர் பாஜக தலைவர் குற்றம்சாட்டினார்.காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370வது  அரசியல்சாசன சட்டத்தை, சட்டத்திற்கு புறம்பாக நீக்கியமுடிவை, மோடி அரசு ரத்துசெய்ய வேண்டும்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நிலைநிறுத்தவும், ஜம்மு – காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணைநிற்கும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க, ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன்னேற்றம்‘ என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பாஜக தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் பிரிவுத்தலைவர் ரவீந்திர ரெய்னா கூறுகையில், ‘சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் என்று கூறுகின்ற ப.சிதம்பரத்துக்கு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ மற்றும் நக்சலைட்டுகளுடன் தொடர்புஇருக்கலாம்.  இதேபோல், திக்விஜய் சிங்கும் பேசியுள்ளார். இவர்கள் இவ்வாறு பேசுவதற்கு அனுமதித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...