தமிழகத்தில் பாஜக எழுச்சிபெறுவது திமுகவுக்கு பிடிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசினார்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக எழுச்சிபெற்று வருவது திமுகவுக்கு பிடிக்கவில்லை. கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு பின்னணியில் திமுக உள்ளது. விவசாயிகள் பிரச்சினை, கல்வி, கடவுள்வழிபாடு என எல்லா விஷயங்களிலும் திமுக இரட்டை வேடம்போடுகிறது.
மத்திய அரசின் திட்டங்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் சென்றுசேர்வதால், இடைத்தரகர்களுக்கு வேலைஇல்லை. விவசாயிதான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம்செய்ய வேண்டும். அதற்காகத்தான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதை மறைத்து இடைத்தரகர்களுக்கு ஆதரவாக திமுக பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பாடம்புகட்ட வேண்டும் என்றார்.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |