திரிணாமுல் காங்கிரஸுக்கு அரசியல் சித்தாந்தம் இல்லை, திசையும் இல்லை.

மேற்கு வங்கத்தில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துள்ளது துரதிஷ்டவசமானது எனினும் அவரது ராஜினாமா கட்சியைபாதிக்காது என்று திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.

மேற்குவங்க மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான லஷ்மிரத்தன் சுக்லா நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.  சட்டப்பேரவை தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில் அங்கு அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க  பாஜக கட்சியைப் பலப்படுத்தி வருகிறது. திரிணமூலிலிருந்து எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.

இதனிடையே சுக்லா வரவேற்கப்படுவதாக பாஜக தெரிவித்துள்ளது. கட்சியில் சேரவும் அழைப்புவிடுத்துள்ளது.

சுக்லா ராஜினா குறித்து வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”சுக்லா பாஜகவில் சேரவிரும்பினால், அவரை நாங்கள் வரவேற்கிறோம். திரிணாமுல் காங்கிரஸுக்கு அரசியல் சித்தாந்தம் இல்லை, திசையும் இல்லை. இது சிபிஐ எதிர்ப்பு (எம்) என்ற புள்ளியிலிருந்து உருவானகட்சி திரிணமூல். அது இப்போது பொருந்தாது. டி.எம்.சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை அடிமட்டத்தில் உள்ளவர்களும் அறிவார்கள். அக்கட்சியின் ஆயுள் இன்னும் கொஞ்சகாலம்தான்.”

பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான பாபுல்சுப்ரியோ ”சுக்லாவை டி.எம்.சியை விட்டுவெளியேறி பாஜகவில் சேரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...