ரூ.48 ஆயிரம் கோடியில் 83 இலகு ரக போர்விமானங்கள் வாங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சிசிஎஸ். எனப்படும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைகூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரதமர் மோடி , மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குபின் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியது, ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் சுயசார்புபெறும் வகையில் இந்திய விமானப்படைக்காக ரூ. 45 ஆயிரத்து 696 கோடி மதிப்பில் நான்காம் தலைமுறைக்கான 73 தேஜாஸ் எம்.கே.1 ஏ ரக இலகு ரக போர் விமானங்கள் மற்றும் 10 தேஜாஸ் எம்.கே.1 ரக போர்விமானங்கள் என 83 நவீன போர் விமானங்கள் வாங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தவிர ரூ. 1,202 கோடி மதிப்பில் ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் என ரூ.48,696 கோடி மதிப்பிலான ராணுவ திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |