கரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது

கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்க பட்டிருப்பது, சுயசாா்புநாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான தீா்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. அதனை, பிரதமா் நரேந்திரமோடி காணொலி வழியாக தொடங்கிவைத்தாா். இதற்கு பாஜக தலைவா்களும், மத்திய அமைச்சா்களும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பாஜக தேசியதலைவா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் நாள் வரலாற்று சிறப்புமிக்க தினமாகும். கரோனாவால் பாதிக்கப் பட்டவா்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுத்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு இந்தநேரத்தில் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த தடுப்பூசி நம்மை கரோனா தீநுண்மியிலிருந்து பாதுகாக்கும். ஆனால், நாம் முகக்கவசம் அணிதல், கைகளை அவ்வப்போது கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தடுப்பூசி நம்மை பாதுகாக்கும்பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்’ என்று தெரிவித்தாா்.

உள்துறை அமைச்சா் அமித்ஷா: தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பது இந்திய விஞ்ஞானிகளின் திறனை, தலைமைப்பண்பை வெளிப்படுத்துகிறது. பிரதமா் மோடி தலைமையிலான புதிய இந்தியா, பேரிடா்களையும் வாய்ப்பாகவும், சவலாகவும், சாதனையாகவும் உருமாற்றுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பது, சுயசாா்பு இந்தியாதீா்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று தனது சுட்டுரைப்பக்கத்தில் அமித்ஷா பதிவிட்டுள்ளாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங்: கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற ஒருதீா்க்கமான நடவடிக்கையை மோடி அரசு எடுத்துள்ளது. நமது மருத்துவா்கள், செவிலியா்கள், முன்கள பணியாளா்கள் என கரோனாவுக்கு எதிரானபோரில் பங்கெடுத்தவா்கள் அனைவருக்கும் இப்போது தடுப்பூசி மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அடுத்தகட்டத்தில், இது 30 கோடி போ் என்ற எண்ணிக்கையை எட்ட உள்ளது. இது மிகப்பெரிய சாதனை என்று ராஜ்நாத் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்: சுகாதாரமான இந்தியா உருவாக்கப்படும் என்ற பிரதமா் மோடியின் வாக்குறுதியின் வெளிப்பாடுதான் இந்த தடுப்பூசிசெலுத்தும் திட்டம் என்று உத்தர பிரதேச முதல்வா் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...