விவசாயிகள் போராட்டம் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதியவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே மோதல்வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.

கலவரத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர். குடியரசு தின வன்முறைக்கு பிறகும் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்படவில்லை. இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனால், மத்தியபட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் நிலவுகிறது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம்தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண்த் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகள் போராட்டத்தை எப்படி தடுப்பது? போராட்டத்தை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...