விவசாயிகள் போராட்டம் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதியவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே மோதல்வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.

கலவரத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர். குடியரசு தின வன்முறைக்கு பிறகும் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்படவில்லை. இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனால், மத்தியபட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் நிலவுகிறது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம்தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண்த் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகள் போராட்டத்தை எப்படி தடுப்பது? போராட்டத்தை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.