மார்ச்-7ல் தேர்தல் தேதி அறிவிப்பு? பிரதமர் நரேந்திரமோடி சூசகம்

அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல்நடைபெற உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி 3,222 கோடியில் உருவாக்கபட்டுள்ள பெட்ரோலிய திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்ததுடன் இரண்டுபொறியியல் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பிரமாண்டமாக நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உஜ்வாலா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் எரி வாயு இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக பெருமிதம்தெரிவித்தார்.

2016-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை மார்ச் 4ல் தேர்தல் ஆணையம் வெளியிட்டதாகவும் தற்போது மார்ச் 7-ம்தேதி தேர்தல்தேதி அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் பிரதமர் சூசகமாகத் தெரிவித்தார். அதற்கு முன்னதாக அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு முடிந்தளவுக்கு அதிகபட்சமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

அதைத்தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தின்கீழ் நோபரா – தட்சிணேஸ்வரம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார். அதன்பிறகு பொதுக்கூட்டத்தில் பேசியவர், மேற்குவங்க மாநில மக்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் அநீதி இழைத்துவருவதாகவும், மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டதாகவும் கூறினார்.

வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக நிச்சயம் ஆட்சியமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம் உண்மையான மாற்றத்தை கொண்டுவந்து இளைஞர்களின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என மோடி உறுதிபடக்கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...