தேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்!

தேர்வு பயத்தைபோக்கும் நிகழ்ச்சியில், பாரத பிரதமருடன் கலந்துரையாட, பள்ளி மாணவர்கள் வரும் 14ம் தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பொதுத்தேர்வு பயத்தில் இருந்து விடுபட்டு, எதிர்கால லட்சியபாதையில் மாணவர்கள் பயணிக்க, தன்னம்பிக்கை அளிக்கும்வகையில், பரீட்சைக்கு பயமேன் (pariksha pe charcha) என்ற தலைப்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். நடப்பாண்டிற்கான இந்நிகழ்ச்சி, கொரோனா காரணமாக, மார்ச் இறுதியில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நடக்கும் இக்கலந்துரையாடலில், நடப்பாண்டு பெற்றோர், ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.

இதற்கு, www.innovate india.mygov.in/ppe2021 என்ற இணையதள முகவரியில், வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேசியகல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.இதில் வெற்றிபெறுவோர், தங்களுக்கான கேள்விகளை, 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவுசெய்தால், பிரதமர் பதிலளிப்பார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தற்போதுவரை, 4 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், ஒருலட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், இணையதளம் வாயிலாக பதிவுசெய்யலாம் என, பள்ளிகளுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...