10 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்களுடன் ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்த எல்.முருகன்

தமிழக சட்டமன்றதேர்தல் ஏப்ரல் 6ம்தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் திருவிழா களைக் கட்டியுள்ளது. அரசியல்கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியபணிகளை எல்லாம் முடித்துகொண்டு, தற்போது தேர்தல்களத்தில் வேட்பாளர்களுக்கு தீவிர ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர். அதிமுகவுடனான பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிய உள்ளதையடுத்து நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல்செய்தனர். தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தாராபுரம் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிமனையில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக சார் ஆட்சியர் அலுவலகம்வரை சென்ற எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல்நடத்தும் அதிகாரி பவன்குமாரிடம் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது அவருடன் இதன்பிறகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.சி.மகேந்திரன் ஆகியோர் இருந்தனர்.

தன்னுடைய டெபாசிட் தொகையை செலுத்துவதற்காக தொண்டர்களிடம் இருந்து பெற்ற 5, 2 ரூபாய் நாணயங்கள், 10 ரூபாய் நோட்டுக்களை எல்.முருகன் வசூலித்து வைத்திருந்தார். அதனை தேர்தல்நடத்தும் அதிகாரிமுன்பு எண்ணி காண்பித்து, சரியாக 5 ஆயிரம் ரூபாய் இருப்பதை உறுதிசெய்த பிறகே செலுத்தினார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக பழனிமுருகன் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.