10 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்களுடன் ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்த எல்.முருகன்

தமிழக சட்டமன்றதேர்தல் ஏப்ரல் 6ம்தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் திருவிழா களைக் கட்டியுள்ளது. அரசியல்கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியபணிகளை எல்லாம் முடித்துகொண்டு, தற்போது தேர்தல்களத்தில் வேட்பாளர்களுக்கு தீவிர ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர். அதிமுகவுடனான பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிய உள்ளதையடுத்து நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல்செய்தனர். தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தாராபுரம் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிமனையில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக சார் ஆட்சியர் அலுவலகம்வரை சென்ற எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல்நடத்தும் அதிகாரி பவன்குமாரிடம் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது அவருடன் இதன்பிறகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.சி.மகேந்திரன் ஆகியோர் இருந்தனர்.

தன்னுடைய டெபாசிட் தொகையை செலுத்துவதற்காக தொண்டர்களிடம் இருந்து பெற்ற 5, 2 ரூபாய் நாணயங்கள், 10 ரூபாய் நோட்டுக்களை எல்.முருகன் வசூலித்து வைத்திருந்தார். அதனை தேர்தல்நடத்தும் அதிகாரிமுன்பு எண்ணி காண்பித்து, சரியாக 5 ஆயிரம் ரூபாய் இருப்பதை உறுதிசெய்த பிறகே செலுத்தினார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக பழனிமுருகன் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...