சித்தர்கள் என்பவர்கள் யார்

சித்தர்கள் என்பவர்கள் மனம் புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய அந்தக் காரணங்கஈளை புறம்பே உலக வாஞ்சையில் டுபட ஒட்டாது தன்னுளே நிலை நிறுத்தி 96 தத்துவ விடயங்களை சுட்டு நீறாக்கி இவ்வுலகு உய்யும் வண்ணம் தன்னைப் பரம் பொருளோடு இரண்டறக் கலப்பித்து சாயுச்சிய பதவியை அடைந்து நிற்க தாமரை இலைத் தண்ணீர்

போலும், புளியம் பழமும் தோடும் போலவும் ஜீவ சமாதியை அடையப் பெற்றவர்களேயாவார்கள்.

இவர்களுக்கு கால வரைமுறை என்பது கிடையாது எப்போது வாழ்ந்தார்கள்,எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்ற ஆராய்ச் சிக்கு நாம் உட்படுவோமேயானால் நிச்சயம் தோல்வியே கிட்டும்.

ஆனால் போகர்7000 லும், அகத்திய மகா முனிவர் 12000லும் ஒரு சில சித்தர்களுக்கு மட்டும் வயது வரம்பு,குலம்,மாதம் நட்சத்திரம் போன்ற விபரங்கள் காணக் கிடக்கின்றன.

இவர்கள் 48 சித்தர்கள் எனவும்,18சித்தர்கள் எனவும், 9 சித்தர்கள்(நவ) எனவும், சப்தரி~pகளாகிய 7 சித்தர்கள் என்றும் இன்னும் சில நூற்களில் நவகோடிச் சித்தர்கள் எனவும் பலவாறாகக் கூறப்படு கிறது.

இவர்களது நூலைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமே யானால் இறைவனால் உண்டு பண்ணப்பட்டுள்ள அண்டசம்–முட்டையில் தோன்றுவன,சுவேதசம்–வியர்வையில் தோன்றுவன,உற்பீசம்–விதை வித்துக்களில் தோன்றுவன,பையசம்–கருப்பையில் தோன்றுவனவாகிய நான்கு விதமான யோனிகளின் வழிச் சிரு~;டிக்கப்பட்டுள்ள 84நூறு ஆயிரம் கோடி ஜீவ பேதங்களும் இத்தகையன என்றும்,சப்த பிறப்புகளாகிய நீர் வாழ்வன, ஊர்வன, தவழ்வன பறப்பன நடப்பனவாகிய தேவர் முதல் புற்ப+ண்டு வரை ஒரறிவு முதல் 7வது அறிவு வரை சகல சரஅசர வஸ்து களையும் பிரித்து எடுத்து அதன் குணம் செயல் முதலிய யாவற்றையும் மனித வாழ்வுக்கு உபயோகப்படும் படிச் சொல்லி வைத்தருளி இருக் கின்றனர்.

அட்டாங்க யோக நெறிமுறைகளாகிய இயமம், நியமம், ஆசனம், பிறாணாயாமம், பிரத்யாகாரம், தாரனை, தியானம் சமாதி முதலியவற்றின் வழியே நடத்திச் சென்று வாத வைத்திய யோக ஞானங்களையும் இன்னும் சல்லியம், ஒட்டியம், தொட்டியம், தொட்டவுடன் நசிந்து போகும் சித்து நொடியான், ஒடியான், கிருகரணை, எட்டாரம், ல~ம் சித்து,கலக வித்தை, கக்கிசம், பஞ்சபட்சி,சீன வித்தை, வினோதா ரூடம்,துண்டு துண்டாக வெட்டும் ஜாலம், செப்பிடு வித்தை, பேதனம், எக்~ணி, தர்க்க சாஸ்திரம்,ப~;ணி, தக்~ணி,வாதம், ஜோதிடம், நாடி, காவியம், வைத்தியம்,இலக்கணம்,சூடாமணி, சித்தர் ஆருடம், கன்னம், சிமிழ் வித்தை, கம்பி சூஸ்திரம், சூனியம், திறவுகோல், நடுக்கு சல்லியம், மதன நூல், சிற்பம், போர்வித்தை, பெருநூல்சல்லியம், இருப்பு க்கடலை ,மலைநிகண்டு , சித்த சுத்தி, அஞ்சல்,மந்திரம், அஸ்திரப் பயிற்சி, கருக் கூட்டு, சலமாட்ட நிகண்டு,மலை வளம்,ப+ர்வகாண்டம்,கலைக்ஞானம்,ரேகை வித்தை, வர்மம்,ரசமணி,ஆகமங் கள்,விஸ்வாமித்ரம் மற்றும் பிற நூல்களும் நமக்காகச் சொல்லி உள்ள னர்.

Tags; சித்தர்கள் ,என்பவர்கள், மனம் , புத்தி, அகங்காரம் , சித்தர் வரலாறு

நன்றி சிவநாதன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...