கரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க முடியும்

கரோனா வைரஸ் முதல்அலையை தடுத்தது போன்று, 2-வது அலையையும் நம்மால் தடுக்கமுடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்றுமாலை முக்கிய ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பிறகு நாட்டுமக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:

கரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல்கவனம் செலுத்தவேண்டும். அடுத்த 3 வாரங்கள் மிகமுக்கியமானது. இந்தகாலத்தில் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும்.

மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முதல் அலையை விட தற்போது வைரஸ்பரவல் அதிகமாக உள்ளது. இது கவலை அளிக்கிறது.

எனினும் கரோனா முதல் அலையின்போது இருந்ததைவிட இப்போது போதிய உள்கட்டமைப்பு வசதியுடன் தயார்நிலையில் உள்ளோம். முதல் அலையின்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். தற்போது 2-வது அலைகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கருதுகிறேன்.பெரும்பாலான மாநில அரசுகளின் செயல்பாடும் போதுமானதாக இல்லை.

கரோனா வைரஸ்பரவல் அதிகரிப்பது குறித்து அச்சப்படவேண்டாம். மாநில அரசுகள் பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லவேண்டும். குறிப்பாக 70 சதவீதம் அளவுக்கு ஆர்டி பிசிஆர் பரி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது 72 மணி நேரத்துக்குள் குறைந்தபட்சம் 30 பேரை கண்டுபிடித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முதல் கரோனா வைரஸ் அலையை தடுத்ததுபோன்று, சிறந்த நிர்வாகத்தின் மூலம் 2-வது அலையையும் நம்மால் தடுக்கமுடியும்.

கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதிவரை கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நாட்களாக கடைபிடித்து, அதிகம் பேருக்கு தடுப்பூசிபோட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும். இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலைவரை ஊரடங்கை அமல் செய்யவேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.