சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கை

சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலகநாடுகள் கவனம் செலுத்தவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

.ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில், கடந்த 2016ம் ஆண்டுமுதல், தொழில் முனைவோர்களுக்காக, ‘விவா டெக்’ என்ற மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மாநாட்டின் துவக்கவிழா நேற்று நடைபெற்றது.இதில், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றுப் பேசினார்.

அதில் அவர் கூறியதாவது:கடந்த ஒர் ஆண்டு காலமாக, கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.இதனால், நாம் பல்வேறு துறைகளில், பல இடையூறுகளை கண்டுள்ளோம். இதனால் நாம் விரக்திஅடைய வேண்டியதில்லை. பதிலாக, நாம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பதில் கவனம் செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டு இதேநேரத்தில், உலகமே கொரோனாவுக்கான தடுப்பூசியை தேடியது.

ஆனால், தற்போது இந்தியாவில், இரண்டுதடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பல தடுப்பூசிகள், இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இவை விரைவில் பயன்பாட்டிற்குவரும்.எதிர்கால சவால்களை கருத்தில்கொண்டு, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலகநாடுகள் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

இந்தியாவில் முதலீடுசெய்வதற்கு, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். முதலீட்டாளர்களுக்காக மாறுபட்ட மற்றும் விரிவானசந்தை காத்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுதும் உள்ள கொரோனா முன்கள பணியாளர்களின் பணிதிறனை மேம்படுத்தும் நோக்கில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப ஆறுவிதமான குறுகியகால பயிற்சியினை, மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சகம் வடிவமைத்துள்ளது.

இந்தபயிற்சி வகுப்புகளை, பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நாளை துவக்கிவைக்கிறார்.மருத்துவ துறையின் தற்போதைய மற்றும் எதிர்காலதேவையை கருத்தில் வைத்து, மருத்துவதுறை சாராத திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு இந்தபயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

நாடுமுழுதும் உள்ள, 26 மாநிலங்களில், 111 பயிற்சி மையங்களில், இந்தபயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்காக, 276 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேற்குவங்க மாநிலம், முர்ஷிதாபாத் மற்றும் கல்யாணி மாவட்டங்களில், 250 படுக்கை வசதிகள் உடைய, கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க, ‘பிஎம்கேர்ஸ்’ அறக்கட்டளை நிதியில் இருந்து, 41.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தபணிகளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...