பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புகவுன்சிலின் ஆகஸ்ட்டு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப்பிரதமர் என்ற பெருமையைப் நரேந்திர மோடி பெறவுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக 2 ஆண்டுகாலம் செயல்படும். இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த ஜனவரிமாதத்தில் பொறுப்பேற்றது.

பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை சுழற்சிமுறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும். இதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான பொறுப்பை இந்தியா ஞாயிற்றுக் கிழமை ஏற்றுக் கொண்டது.

75ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட உள்ள நிலையில், தலைமைபொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா. சபையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரபிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதில், கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனைகளும், சிரியா உள்ளிட்ட நாடுகளின்விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா ஆகியோர் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. கடந்த 1992ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு சபைகூட்டத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கலந்துகொண்டார். எனினும், முதல் முறையாக பாதுகாப்பு சபையின் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் டி.எஸ்.திருமூர்த்தி, கூறுகையில், “ஆகஸ்ட் மாதத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தலைமைஏற்கும் இந்தியா, கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய 3 விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தஉள்ளது. அமைதிகாப்புப் படையினரின் நினைவாக நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த உள்ளது. சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன், மத்தியகிழக்கு நாடுகள் தொடர்பான குறித்தும் முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புசபைக்கு முதன்முறையாக 1950ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா தலைமைவகித்தது. இதனை தொடர்ந்து, 10ஆவது முறையாக இந்தியா தலைமை வகிக்கிறது. இதற்குமுன்னதாக 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்புசபை இயங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.