இவர்களுக்கு புதிய வார்த்தைகளை தான் நாம் தேட வேண்டும்

கோவில்பட்டியில் தினமும் நண்பர்கள் சந்தித்து பேசும் படித்துறை ஒன்றுண்டு.

நேற்று நான் படித்துறையின் மேல் உட்கார்ந் திருந்தேன்.

எனக்கு நேர் எதிரே கீழ்ப்படியில் ஐந்தாறு கல்லூரி மாணவர்கள் அமர்ந்து செல்போனில் ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான் நேராகமேலே அமர்ந்திருந்ததால் எனக்கும் அப்படம் தெளிவாகத் தெரிந்தது.

நான் ஏற்கனவே அந்த வீடியோவை பார்த்திருக்கிறேன்.

தலீபான்கள் மாதிரி உடையணிந்த மூன்று பேர் ஒருவரை இழுத்து வருகிறார்கள்.

இழுத்து வரப்படுபவரும் அதேமாதிரி உடைதான் அணிந்திருக்கிறார்.

தரையில் கிடக்கும் மரக்கட்டையில் அவருடைய கையை அமுக்கி வைக்க ஒருவன் ஒரே வெட்டில் அதை துண்டிக்கிறான்.

துண்டிக்கப்பட்ட மணிக்கை ஐந்து விரல்களுடன் வாழைப்பூவைப் போல் தரையில் துடிக்கிறது.

அத்தோடு விடாமல் அவரை இழுத்துக் கொண்டு போய் கொதிக்கிற வெண்ணீரில் அந்த ரத்தம் சொட்டும் மொட்டைக் கையை அமுக்குகிறார்கள்.

பார்க்கிற யாருக்கும் ஈரக்குலை பதைபதைக்கும் காட்சி.இதைப் பார்த்த மாணவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள் காட்டுமிராண்டிகள்,ஆதிவாசிகள் என்று.

உடனே நான் சொன்னேன் தம்பிகளே தயவு செய்து அவர்களை அப்படி சொல்லாதீர்கள் என்றேன்.

ஒரே நேரத்தில் என்னை திரும்பி பார்த்த மாணவர்கள் இதைப் பாருங்க தாத்தா காட்டுமிராண்டிகளிலும் சுத்த காட்டு மிராண்டிகள் என்றார்கள்.

நான் எழுந்து ஒருபடி கீழிறங்கி அவர்களுடன் உட்கார்ந்தேன்.
“காட்டு மிராண்டிகள் ஆதிவாசிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?அவர்கள் என்றைக்காவது இப்படி கையை துண்டித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
என்றுகேட்டேன்.

அனைவரும் என்னையேஉற்றுப் பார்த்தார்கள்.
“தான் ஒரு மரத்தின் கிளையை வெட்டும் போதும் ஒரு செடியை பிடுங்கும் போதும் அந்த மரத்திடமும் செடியிடமும் மன்னிப்புக் கேட்ட பின்பே மரக்கிளையை வெட்டும் செடியைப் பிடுங்கும் ஆதிவாசிகளை நீங்கள் பார்த்ததுண்டா?

வனங்களில் வசிக்கும் ஆதிவாசிகளை வெளியேற்ற அரசு ராணுவத்தையும் போலீசையும் அனுப்பும் போது ஒவ்வொரு ஆதிவாசிகள் பெண்ணும் ஆணும் ஆளுக்கொரு மரத்தை கட்டிப்பிடித்துக் கொள்வார்கள்.

ஏன் மரத்தை கட்டிப் பிடிக்கிறீர்கள் உங்களை வெளியேற்ற வரும் ராணுவ வீரர்களை காவலர்களை கட்டிப்பிடிக்க வேண்டியதுதானே என்று கேட்டால் அவர்களின் பதில் என்ன தெரியுமா
“நாங்கள் இதயம் உள்ளவர்களைத்தான் கட்டிப் பிடிப்போம்”இதுவும் காட்டுமிராண்டிகளின் பதில்தான்.

பழங்களை தின்று கொட்டைகளை மலை முழுக்க பரப்பி மரங்களை உருவாக்கும் வௌவால்களுக்கு வருடம் ஒருமுறை திருவிழா நடத்தி வௌவால்களுக்கு நன்றி சொல்லி வழிபாடு நடத்தும் ஆதிவாசிகளை உங்களுக்கு தெரியுமா.

வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை கூறுபோட்டு பங்கு வைக்கும் போது கணவனை இழந்து வாழும் வேட்டைக்கு வர இயலாத விதவைகளுக்கு முதல் பங்கு மாமிசம் கொடுக்கும் அறவுணர்வுள்ள ஆதிவாசி காட்டுமிராண்டிகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஒரே மரத்தில் பாதிப் பழங்களை பறவைகளுக்கு பகிர்ந்து விட்டு மீதி பாதி மரத்து பழங்களை மட்டும் பறித்துண்ணும் ஆதி வாசிகளை பார்த்திருக்கிறீர்களா?
சினை’பெட்டை மிருகங்களை வேட்டையாடாமல் பருவமில்லாத குட்டிகளையும் கொல்லாமல் அறத்துடன் வாழும் காட்டுமிராண்டி ஆதிவாசிகளை நீங்கள் பார்த்ததுண்டா?

இன்னும் ஆதிவாசிகளைப் பற்றி ஏராளம் சொல்லலாம்.

ஆகவே கைகளை கால்களை தலையை வெட்டுபவர்களை தயவு செய்து காட்டுமிராண்டிகள் ஆதிவாசிகள் என்று தயவு செய்து சொல்லாதீர்கள் தம்பிகளே என்றேன்.

அப்படின்னா இவங்களை எப்படித்தான் சொல்றது?
இவர்களை குறிப்பிட தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை.

இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

நீங்களும் முயற்சி செய்யுங்கள் தம்பிகளே என்றேன்.

அப்புறம் என்னை யாரென்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் பதிவு

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...