திருக்கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு விண்ணப்பிப்போம்

திருக்கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு, தகுதியான நபர்களை விண்ணப் பிக்க வைக்க வேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறைவனுக்கு செலுத்திய உண்டியல் காணிக்கைபணத்தில் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு சொகுசு கார்களை வாங்கி குவிக்கிறார்கள். அறநிலைய துறையின் இது போன்ற பல்வேறு அவலங்கள் காரணமாக திருக்கோயில்கள் பல திறமையாகசெயல்பட முடியாமல் உள்ளன. இதற்காக பாஜக சார்பில் போராடி வருகிறோம். இப்போது அறநிலையத் துறையில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நீதி மன்றத்தில் மாநில அரசு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தின்படி, ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள அனைத்து திருக் கோயில்களிலும் அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப் பங்களை வரவேற்கிறது. நாம் எல்லோரும் திருக்கோயில்களில் நடைபெறும் அவலங்களை குறைசொல்வதோடு மட்டுமல்லாது, அவற்றையெல்லாம் சரிசெய்யும் அதிகாரத்தையும் பெறக் கூடிய மிக சாதகமான சூழ்நிலை தற்போது நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, பாஜக மாவட்டத்தலைவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள திருக் கோயில்களைக் கண்டறிந்து பட்டியலிடுங்கள். அந்த கோயில்களுக்கு அறங்காவலராக பணியாற்ற தகுதியுள்ள நபர்களை தேர்வுசெய்யுங்கள். அவரை முறைப்படி அரசுக்கு நவம்பர் 9-க்குள் விண்ணப்பிக்க வையுங்கள்.

தமிழகத் திருக் கோயில்களைப் பாதுகாக்கும் பெரும்பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.தகுதியான அறங்காவலர் நியமனத்தை கண் காணிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் தலையீடுகள் வந்தால் அதை நீதியும், சட்டமும் தடுக்கும். நாம் அனைவரும் நம்திருக் கோயில்களைப் பாதுகாக்க முன்வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...