கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர அனுமதிக்க கூடாது என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார் .
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது : அணு மின் நிலையத்தை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது வரவேற்க தக்கது. தமிழகத்தில் கடும் மின்பற்றாகுறை நிலவி வரும் நிலையில் கூடங்குளத்தில்
தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுவதை அனுமதிக்ககூடாது.
ஐ.நா. மனிதஉரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான_தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது மகிழ்ச்சியை தருகிறது . தீர்மானத்தை ஆதரித்த தோடு நின்று விடாமல் இலங்கையை போர் குற்றவாளி நாடாக அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஆட்சியிலிருந்த கடந்த 5 ஆண்டுகளில் தனிதமிழ் ஈழம் பற்றி பேசாத கருணாநிதி இப்போது தனி ஈழம் தான் பிரச்னைக்கு ஒரேதீர்வு என்கிறார். இலங்கை இறுதி போரின்போது ஈழத்தமிழர்கள் அழிவுக்கு திமுகவும் துணை நின்றது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.