உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா திங்கள் கிழமை பொறுப்பேற்று கொண்டார். உச்சநீதிமன்றத்தில் இப்ராஹிம் கலிஃபுல்லாவுக்கு தலைமை நீதிபதி கேஎச். கபாடியா திங்கள் கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் சிறுபான்மை வகுப்பைச்சேர்ந்த நீதிபதிகள் அல்தமஸ் கபீர், அஃப்டாப் ஆலம் ஆகியவர்களை தொடர்ந்து மூன்றாவது நீதிபதி கலிஃபுல்லா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தை சேர்ந்த நீதிபதி பி. சதாசிவத்துடன் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் இரண்டாவது தமிழக நீதிபதி கலிஃபுல்லா ஆவார்.
இவர் தமிழகத்தின் காரைக்குடியில் 1951ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்ததார் , 1975ம் ஆண்டு முதல் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்கினார். 2000ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு , ஜம்முகாஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2011ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதே_ஆண்டு ஏப்ரலில் ஜம்முகாஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் ஆனார்
Tag எஃப்எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, இப்ராஹிம், கலிஃபுல்லா, நீதிபதி, இப்ராஹிம் கலிஃபுல்லாவுக்கு, தலைமை நீதிபதி
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.