உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா திங்கள் கிழமை பொறுப்பேற்று கொண்டார். உச்சநீதிமன்றத்தில் இப்ராஹிம் கலிஃபுல்லாவுக்கு தலைமை நீதிபதி கேஎச். கபாடியா திங்கள் கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் சிறுபான்மை வகுப்பைச்சேர்ந்த நீதிபதிகள் அல்தமஸ் கபீர், அஃப்டாப் ஆலம் ஆகியவர்களை தொடர்ந்து மூன்றாவது நீதிபதி கலிஃபுல்லா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தை சேர்ந்த நீதிபதி பி. சதாசிவத்துடன் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் இரண்டாவது தமிழக நீதிபதி கலிஃபுல்லா ஆவார்.
இவர் தமிழகத்தின் காரைக்குடியில் 1951ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்ததார் , 1975ம் ஆண்டு முதல் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்கினார். 2000ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு , ஜம்முகாஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2011ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதே_ஆண்டு ஏப்ரலில் ஜம்முகாஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் ஆனார்
Tag எஃப்எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, இப்ராஹிம், கலிஃபுல்லா, நீதிபதி, இப்ராஹிம் கலிஃபுல்லாவுக்கு, தலைமை நீதிபதி
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
Leave a Reply
You must be logged in to post a comment.