‘பிரதமர் மோடி, உலக தலைவர்கள் அனைவருடனும் பேசக் கூடியவர். உலக புவிசார் அரசியலில் முக்கிய தலைவர்’ என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பாராட்டி உள்ளார்.
ராஷ்டிரபதி பவனில் சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பேசியதாவது: பிரதமர் மோடி அவர்களே, இன்று நீங்கள் உலகத் தலைவர்கள் அனைவருடனும் பேசக்கூடிய தகுதியைப் பெற்றுள்ளீர்கள். டிரம்ப், ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியம், கிரீஸ் அல்லது ஈரான், லத்தீன் அமெரிக்க தலைவர்களுக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள்.
இதை வேறு எந்த தலைவரும் இத்தகைய நிலையில் இல்லை. இன்றைய புவிசார் அரசியல் சூழலில் நீங்கள் ஒரு முக்கிய தலைவராக இருக்கிறீர்கள். ரஷ்யாவின் புடின், உக்ரைனின் ஜெலன்ஸ்கி உடன் பேச முடியும். இது வேறு எந்தத் தலைவராலும் இப்போது செய்ய முடியாத ஒன்று. உலகிற்கு அமைதியைக் கொண்டுவருவதில் இந்தியா உறுதியாக உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. இந்தியாவில், நீங்கள் வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுகிறீர்கள். இந்தியாவில், உலகில் அமைதியைக் காக்க நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். இவ்வாறு சிலி அதிபர் கூறினார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |