மற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே உண்ண வேண்டும்

மற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே உண்ண வேண்டும் நம் சாஷ்திரங்களின் படி ஐந்து பணிகள் உள்ளன , அதாவது ஐந்து வழிபாடுகள் உள்ளன. முதலாவது ஓதுதல். அதாவது ஒவ்வொரு நாளும் நலல புனிதமான நூல்களை படிக்க வேண்டும். இரண்டாவதாக கடவளையோ அவதார புருஷர்களையோ, ஞானிகளையோ வழிபட வேண்டும் .மூன்றாவதவதாக நம் மூதாதையர்களுக்கு நாம் செய்ய

வேண்டிய கடமையை செய்ய வேண்டும் . நான்காவதாக மானிடர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமை.

தேவைப்படு பவர்களுக்கோ, ஏழைகளுக்கோ வீடு அமைத்துத் தராமல் தான் மட்டும் ஒரு
வீட்டில் வசிக்க மனிதனுக்கு உரிமையில்லை. இல்லறத்தானின் வீடு எல்லோருக்கும்
ஏழைகளுக்கோ, துன்பப் படுகிறவர்களுக்கோ திறந்திருக்க வேண்டும். அப்போதுதான்
அவன் உண்மையான இல்லறத்தானாக இருக்க முடியும்.

உலகில் நாம் இருவர் மட்டுமே வாழ்கிறோம் என்ற சுய நலத்துட ன், தானும் தன் மனைவியும் மட்டும் மகிழ்ச்சியோடு வாழ ஒருவன் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்வானாகில், அவன் ஒரு நாளும் ஆண்டவனை நேசிப்பவனாக மாட்டான். அது மிகப் பெரிய தன்னலமான
காரியமாகும். எவனுக்கும், தனக்கு மட்டும் உணவு தயாரித்துக் கொள்ள உரிமையில்லை. மற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே உண்ண வேண்டும். மாம்பழம் போன்ற பருவகாலப் பழங்கள் முதல் முதலாகக் கடைகளுக்கு விற்பனைக்கு வந்ததும் சாதாரணமாக மக்கள் முதலில் ஏழைகளுக்குக் கொடுப்பதற்காகக் கொஞ்சம் வாங்கி அவர்களுக்குக் கொடுத்து விட்டுப் பிறகுதான் தாம் உண்பர்.

இது இந்தியப் பழக்கம். அந்தப் பழக்கத்தையே இந்நாடும் பின்பற்றுவது
நல்லது. இப்பழக்கம் ஒருவனை பிறர் பொருட்டு வாழச்செய்கிறது. அத்துடன் அவன்
மனைவி, மக்களையும் அதே பழக்கத்திற்குக் கொண்டு வருகிறது. பழங்காலத்தில்
ஹீப்ரூக்கள் தங்களுக்குச் சொந்தமான மரங்களில் முதலில் பழுக்கும் பழங்களை
ஆண்டவனுக்கு அளிப்பது வழக்கம். ஒவ்வொரு பொருளிலும் முதலில் கிடைப்பது
ஏழைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் எஞ்சியதைப் பெறவே நமக்கு உரிமையுண்டு
ஏழைகள் ஆண்டவனின் பிரதிநிதிகள். துனபப்படும் ஒவ்வொருவனும் ஆண்டவனின்
பிரதிநிதி. பிறருக்குக் கொடாமல் தானே உண்டு மகிழ்ச்சியடைகிறவன் பாவத்தை
புரிகிறhன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...