ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு விசாரணை கமிஷன்களின் தலைவர்களாக நியமிக்க கூடாது

ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு விசாரணை கமிஷன்களின்  தலைவர்களாக நியமிக்க கூடாது ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு விசாரணை கமிஷன்களின் தலைவர் களாகவோ, நடுவர்மன்ற தலைவர்களாகவோ நியமிக்க கூடாது என பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க சட்டப்பிரிவு சார்பாக டெல்லியில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்றதும், குறைந்தது இரண்டு வருடங்களுக்கு அவர்களை விசாரணை கமிஷன்களின் தலைவர்களாகவோ, உறுப்பினர்களாகவோ, நடுவர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களாகவோ நியமிக்க கூடாது.

ஏனெனில் அவர்கள் ஓய்வுபெறுவதற்கு முன்பாக , இது போன்ற பதவிகள் வழங்கப்படும் என வெளிப்படையாகவோ, மறை முகமாகவோ ஊக்கப்படுத்தும் நிலை இருந்துவருகிறது. இதனால் அவர்கள் அரசுக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள். பாதகமான தீர்ப்புகளை வழங்குகிறார்கள் .

அதற்கு என்னிடம் நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன. எங்கள் கட்சியைச்சேர்ந்த குஜராத் மந்திரி அமித்ஷா அடிக்கடி பொய்வழக்குகளில் சிக்க வைக்கப் படுகிறார். ராஜஸ்தான் மந்திரி ஒருவர் பழிவாங்கபபட்டு, சிறையில் சித்திரவதை அனுபவிக்கிறார். தீவிரவாதத்துக்கு எதிராகபோராடிய பல உயர் காவல்துறை அதிகாரிகள் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு பழிவாங்கப் படுகிறார்கள். எனவே சிபிஐ,யும், நீதித் துறையும் தன்னிச்சையாகவும் , சுதந்திரமாகவும் செயல்பட வேண்டியதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...