குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ‘அரசர்களின் அரசர்’ என தொழிலதிபர் அனில் அம்பானி புகழாரம் சூட்டியுள்ளார். குஜராத் மாநில தொழில்வளர்ச்சி தொடர்பாக இந்திய தொழிலதிபர்கள் சந்திப்பை நரேந்திரமோடி இன்று நடத்தியிருந்தார்.
இதில் குஜராத்தின் தொழில் அதிபர்கள் முகேஷ்அம்பானி, அனில் அம்பானி, கௌதம் அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, விசாலமான பார்வைகொண்ட தலைவர் நரேந்திர மோடி. குஜராத் மாநில அரசுடன் இணைந்து ரூ500 கோடியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
மேலும் அவரது இளைய சகோதரர் அனில் அம்பானியோ அரசர்களின் அரசராக திகழ்பவர் நரேந்திர மோடி என புகழாரம் சூட்டினார். மேலும் மகா பாரத அர்ச்சுனனை போல் தெளிவான சிந்தனைகொண்டவர் என்றும் பாராட்டியுள்ளார். உலகம் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய மிகப் பெரிய காந்தமாக இருப்பவர் நரேந்திரமோடி என்றும் அனில் அம்பானி பாராட்டினார்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.