கர்நாடக சட்ட பேரவையில் எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிகிடையே உரையை படிக்க முடியாமல் போனதால், ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்.அதை தாக்கல் செய்து விட்டு திரும்பியுள்ளார்
கர்நாடக சட்ட பேரவை கூட்டம் வியாழக்கிழமை பகல் 12 மணிக்குக் கூடியது. சட்டப் பேரவை, மேலவை உறுப்பினர்கள் பங்கேற்ற இக்
கூட்டத்தில் உரையாற்ற ஆளுநர் பரத்வாஜ் வந்தார். உரையை ஆளுநர் பரத்வாஜ் வாசிக்க தொடங்கியதும் மதச்சார்பற்ற ஜனதாதள மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக எழுந்து உரையை வாசிக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த அவையில் உரையாற்ற வேண்டாம் என எதிர் கட்சி தலைவர் சித்தராமையா ஆளுநரை நோக்கி கைகூப்பி வேண்டி கொண்டே இருந்தார் . அவர்களை அமைதியாக இருக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
ஆளும் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் அமைதியாகவே இருந்தனர். உரையை ஆளுநர் வாசிக்க முயன்றார். ஆனால், தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்த ஆளுநர், உரையை அவையில் தாக்கல்செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது பிறகு அவையிலிருந்து ஆளுநர் புறப்பட்டு சென்றார்.
ஆளுநரை அனுப்பி-வைத்துவிட்டு தனது இருக்கைக்கு வந்த, பேரவை தலைவர் போப்பையா புத்தாண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர்உரை அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.
{qtube vid:= YSmxAAbZysg}
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.