இந்நாட்டின் உண்மையான பிரதமர் வாஜ்பாய் மட்டும் தான்

 இந்நாட்டின் உண்மையான பிரதமர் வாஜ்பாய் மட்டும் தான்காங்கிரஸ் தலைமை யிலான ஐ.மு. கூட்டணி பிரதமர் மன்மோகன் சிங்கை நைட் வாட்ச் மேனாக நியமித்துள்ளது . இந்நாட்டின் உண்மையான பிரதமர் வாஜ்பாய் மட்டும் தான் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார் .

பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முனிறுத்த வேண்டும் எனற அனைவரின் எதிர்பார்ப்பை மெய்பிக்கும் விதமாக டெல்லியில் நடந்து வரும் பா.ஜ.க.,வின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் மோடிக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத்சிங் தமது உரையில் மோடியை வெகுவாக புகழ்ந்திருந்தார். பா.ஜ.க.,வின் மற்றொரு மூத்த தலைவரான அருண் ஜேட்லியும் மோடியை பிரதமர் வேட்பாளராக்க ஆதரவுதெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக நடந்து வரும் பா.ஜ.க.,வின் தேசியகவுன்சில் கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாவது ; காங்கிரஸ் கட்சி யில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் பிரணாப் முகர்ஜி தான். ஆனால் அவரை பிரதமராக்காமல் மன்மோகன் சிங்கை பதவியில் உட்காரவைத்தனர். ஏனெனில் பிரணாப் பிரதமரானால் சோனியாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகள் எதுவும் கிடைக்காமல் போய்விடும்.

இதனால்தான் அந்தகுடும்பம் ஆட்டுவிக்கும் பொம்மையான மன்மோகன் சிங் பிரதமராக உட்கார வைக்கப்பட்டுள்ளார் . ஐ.மு.,கூட்டணியின் நைட்வாட்ச் மேனாகத்தான் பிரதமர் மன்மோகன் சிங்கை நியமித்திருக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர் மன்மோகன் சிங். மக்களோடு தொடர்பில்லாத ஒருஅரசாக மன்மோகன் சிங் அரசு செயல்படுகிறது. கடந்த பல ஆண்டுகாலமாக காங்கிரஸ் நாட்டை சீரழித்து விட்டது.

நாட்டின் நன்மதிப்பையே இந்த அரசு நாசமாக்கி விட்டது. காங்கிரஸ் கட்சி ‘குடும்ப’ அரசியலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு குடும்பத்துக்காக நாட்டையே காங்கிரஸ் கட்சி பலி கொடுத்து விட்டது .

குஜராத்தில் நடப்பது எனது ஆட்சியல்ல.. பாஜக.,வின் ஆட்சி.. இந்தவெற்றி என்னால் மட்டும் சாத்தியமானதல்ல.. லட்சக்கணக்கான பா,ஜ,க தொண்டர்களினால் சாத்தியமானது. ஒருசிறந்த அரசியல்வாதியால் நாட்டின் தலைஎழுத்தை மாற்றி அமைக்கமுடியும். பாஜக., ஆட்சி செலுத்தக்கூடிய மாநிலங்கள் அனைத்தும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்நாட்டின் உண்மையான பிரதமர் வாஜ்பாய் மட்டும் தான்.. எங்களுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தநாட்டுக்கு நன்மைசெய்வோம் என மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...