ஊழலை சகித்துக்கொள்ளாத நிலைப்பாட்டினை பாஜக எடுக்கவேண்டும், திட்டமிட்டு உழைத்தால் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றான அரசியல்சக்தியாக பா.ஜ.க.,வால் மீண்டும் உருப்பெறமுடியும் என புதுதில்லியில் ஞாயிற்றுக் கிழமை நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசியுள்ளார்.
தேசிய கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:
1980-ஆம் ஆண்டில் பாஜக தொடங்கப்பட்டபோது பேசிய வாஜ்பாய் “பாஜக வித்தியாசமான கட்சியாகத் திகழவேண்டும்’ என்றார். அதை தொடர்ந்து மிகுந்த கட்டுக் கோப்புடனும் விழிப்புடனும் செயல்படும் கட்சியாக பா.ஜ.க திகழ்ந்தது. ஆனால், சில வருடங்களாக வித்தியாசம் நிறைந்த கட்சியாக பா.ஜ.க விளங்கிவருகிறது. அரசியல் கட்சியில் கருத்துவேறுபாடுகள் எழுவது சகஜம்தான் . கட்சி வளர்ச்சிக்கான மாறுபட்ட கருத்துக்களை வரவேற்க வேண்டும்.
வாரிசு அரசியல் பாஜகவில் கிடையாது; உள் கட்சி ஜனநாயம் ஊக்குவிக்கப் படுகிறது. ஆனால், இந்த அடையாளங் களுக்கு பாதகமாக உள்கட்சிபூசல்கள் உள்ளன. இனிவரும் காலங்களில் இந்த பிரச்னை எழாமல் தடுக்க கட்சியின் மத்திய-மாநில தலைமைகளுடன் ராஜ்நாத்சிங் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
தங்களுக்கு மாற்றாக மத்தியில் வேறு அரசு அமையாது என்ற மேதப்பில் காங்கிரஸ் இருக்கிறது . ஆனால், ஊழல்நிறைந்த காங்கிரஸ் கூட்டணிஅரசு மீது மக்களின் என்ன ஓட்டமோ வேறு மாதுரி உள்ளது . அதனால், எந்த சூழலிலும் ஊழலை சகித்துக்கொள்ளாத கட்சியாக பா.ஜ.க திகழவேண்டும்.
சிறுபான்மையினர் நலன்களுக்காக பா.ஜ.க தந்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஈடுபாடு காட்டவேண்டும். திட்டமிட்டு உழைத்தால் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றான அரசியல்சக்தியாக பா.ஜ.க.,வால் மீண்டும் உருப்பெறமுடியும் என அத்வானி பேசினார்.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.