பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்துவதோடு நம்கடமை முடிந்து விட்டதா?

 பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்துவதோடு நம்கடமை முடிந்து விட்டதா?ஸ்ரீநகரில் நடந்த தீவிரவாத தாக்குதல்குறித்து நேற்று லோக்சபாவில் கடும் அமளிஏற்பட்டது. லோக்சபா கூடியதும் பயங்கரவாத தாக்குதலில் பலியான 5 ராணுவவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து இந்தவிவகாரம் தொடர்பாக எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பாஜக. தலைவர் சுஷ்மாஸ்வராஜ் இந்த விவகாரம்குறித்து அவைக்குவராத உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிக்கை விடவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறுகையில்,

ஒவ்வொரு முறையும் தீவிரவாத தாக்குதல் நடக்கும் போதும் அதில் பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்துவதோடு நம்கடமை முடிந்து விட்டதா? அவர்கள் இங்குவந்து நம் வீரர்களின் தலையை துண்டித்துவிட்டு செல்கின்றனர், விளையாட்டு வீரர்கள்போன்று வந்து தாக்குதல் நடத்துகின்றனர். இது இன்னும் எத்தனைகாலம் தொடரும் என்றார்.

இதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கும், ஷிண்டேவும் உடனே அவைக்கு வரவேண்டும் என கூறியும், தீவிரவாத தாக்குதலை கண்டித்தும் பாஜக உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து கோஷம் இட்டனர். ஷிண்டே மதியம்வந்து அறிக்கை தருவார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் உறுதியளித்த பிறகே அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...