ராஜிவ்காந்தி பிரதமராக ஆவதற்கு முன்பு இடை தரகரா ?

ராஜிவ்காந்தி பிரதமராக ஆவதற்கு முன்பு இடை தரகரா    ராஜிவ்காந்தி பிரதமராக ஆவதற்கு முன்பு போர்விமானங்கள் வாங்குவதில் இடை தரகராக செயல்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது பற்றி காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டும் என பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.

மிகமுக்கியமான ஆயுதபேரங்கள் குறித்து தகவல்கள் வெளிவரும்போது ராஜிவ் குடும்பத்தினரின் பெயர்கள் மட்டுமே கூறப்படுவதாகவும் பாஜக கூறியுள்ளது.

1970களில் ஸ்வீடன் ஆயுத நிறுவனமான சாப்ஸ்கேனியா (Saab-Scania) என்ற நிறுவனம் இந்தியாவுக்கு விக்கென் (Viggen) போர் விமானங்களை விற்க முயன்றபோது அதற்கு இடை தரகராக ராஜிவ் செயல்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனாலும் அந்தபேரத்தில் சாப்ஸ்கேனியா வெற்றிபெற வில்லை.

1975ம் வருடம் அக்டோபர் மாதம் ராஜிவிற்கு இந்த விவகாரத்தில் தொடர்புபிருப்பதாக ஸ்வீடன் தூதரகத்தின் அதிகாரிமூலம் தகவல் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.

இதன் படி ராஜிவை ஏர்இந்தியாவில் பைலட்டாக பணியாற்றுவதாக மட்டுமே அறிவதாகவும், அவரை தொழில்முனைவோராக இப்போது தான் அறிகிறோம் என சுவீடன் தூதரகத்தில் செய்தி பதிவு செய்ய பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க.செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேட்கர் கூறியதாவது ; பாதுகாப்பு துறைக்கு காங்கிரஸ் அரசுசெய்யும் ஒப்பந்தங்கள் அனைத்தும் சுவீடன் மற்றும் இத்தலி நாடுகளுடனேயே மேற்கொள்ள படுகின்றன. மேலும் இந்தஒப்பந்தங்கள் அனைத்தும் ராஜீவ்காந்தி குடும்பத்தினராலேயே மேற்கொள்ள படுகின்றன.

போஃபர்ஸ் பீரங்கிபேர ஊழல் அந்த குடும்பத்தினருக்கு இருக்கும் தொடர்புகளுக்கு இது வரை விடைதெரியவில்லை. ஹெலிகாப்டர் ஊழலில் ஒருகுடும்பத்திற்கு 200 கோடி ரூ லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தகுடும்பம் எது என தெரியவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள் பற்றி கண்டிப்பாக விளக்கம் தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...