அரசியல் தலையீட்டிலிருந்து சிபிஐ-யை விடுவிப்பது தான் நமது முதல் நடவடிக்கை

அரசியல் தலையீட்டிலிருந்து சிபிஐ-யை விடுவிப்பது தான் நமது முதல் நடவடிக்கை நிலக்கரிசுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை மத்திய சட்டஅமைச்சகத்துடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பகிர்ந்து கொண்ட சிபிஐ-யின் நடவடிக்கைக்கு கடும்கண்டனத்துக்கு உரியது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்கஊழல் தொடர்பான சி.பி.ஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், இதனை உறுதிபடுத்தும் விதமாக கடந்த வாரம் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கடந்தவாரம் தாக்கல்செய்த அபிடவிட்டில், நிலக்கரி சுரங்கஊழல் குறித்த சிபிஐ விசாரணை அறிக்கையை சட்டஅமைச்சகத்துடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பகிர்ந்து கொண்டதாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் சட்டஅமைச்சர் அஸ்வினிகுமார் மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கையை சட்டஅமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்டதற்காக சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தன நீதிபதிகள், இது மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் , வழக்கின் ஒட்டு மொத்த நடவடிக்கையையே உலுக்குவதாக இருக்கிறது , விசாரணை அறிக்கையை அரசுடன் பகிர்ந்து கொண்டதை பற்றி நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? என கேள்வி எழுப்பினர் , அரசியல் எஜமானர்களின் அறிவுறுத் தல்களை ஏற்று சி.பி.ஐ., செயல்படக்கூடாது என்றும் கூறினர்.

அரசியல் தலையீட்டிலிருந்து சிபிஐ-யை விடுவிப்பது தான் நமது முதல் நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்றும், சி.பி.ஐ.,யை மீண்டும் சுதந்திரமான அமைப்பாக மாற்றவேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...