சட்டீஸ்கர் நக்சலைட் தாக்குதலை வைத்து அனுதாபம்பெற காங்கிரஸ் முயற்ச்சி

சட்டீஸ்கர் நக்சலைட் தாக்குதலை வைத்து அனுதாபம்பெற காங்கிரஸ் முயற்ச்சி ‘சட்டீஸ்கர் நக்சலைட் தாக்குதலைவைத்து அனுதாபம்பெற காங்கிரஸ் முயல்கிறது,’ என்று பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார் .

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட பாஜக கருத்துகேட்பு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் மோகன் ராஜூலு தலைமை வகித்தார். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாராளுமன்றதேர்தலுக்கு பா.ஜ.க தயாராகி வருகிறது. தேர்தலில் எந்தெந்தபிரச்னைகளை பேசவேண்டும், எந்த மாதிரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும், எந்த_ கட்சிகளுடன் கூட் டணியமைக்க வேண்டும் என்பது குறித்து பா.ஜ.க தொண்டர்களிடம் கருத்துகேட்டு வருகிறோம்.

இந்தகூட்டங்களில் நிர்வாகிகள் கூறியகருத்துகள், கோவாவில் ஜூன் 8 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறும் தேசிய பாஜக . செயற்குழுகூட்டத்தில் தெரிவிக்கப்படும். அந்த கூட்டத்தில் கூட்டணி உள்ளிட்ட முக்கியமுடிவுகள் எடுக்கப்படும்.

சட்டீஸ்கர் நக்சலைட் தாக்குதல் கண்டனத்துக்குரியது. ஆனால், இந்த தாக்குதலில் ஆளும் பா.ஜ.க.,வுக்கு தொடர்பிருப்பதாக மாயை உருவாக்கி, தேர்தலில் அனுதாபம்தேட காங்கிரஸ் நினைக்கிறது. இந்திரா, ராஜீவ் போன்றவர்களின் மரணத்தை காங்கிரஸ் தேர்தலுக்கு பயன் படுத்தியது. இதை பயங்கரவாத தாக்குதலாக மட்டுமே கருதவேண்டும்.
என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...