பேராசை பெரும் நஷ்டம்

பேராசை பெரும் நஷ்டம் ஐபில் – சூதாட்டம். சமீப நாட்களில் ஊடகங்களின் முதல் பக்கங்களை பிடித்து கொண்டிருக்கும் தலைப்பு செய்தி. இந்த சூதாட்டம் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த சோகத்திலும் விரக்தியிலும் ஆழ்த்தி விட்டது. நாம் கணவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த சூதாட்டத்தில் கோடிகளில் பணம் விளையாடி இருக்கிறது. இதற்க்கெல்லாம் என்ன

காரணம்? ஒரே வார்த்தையில் சொல்வதானால் – பேராசை. இந்த பேராசையை பார்க்கும் பொழுது, ஒரு கதை ஞாபகம் வருகிறது.

ஒரு பிரமாணன், ஒரு நாள் நீண்ட பயணம் மேற்கொண்டான், அவன் போகும் வழியில் ஒரு அடர்ந்த காட்டை கடக்க வேண்டி வந்தது. வெயிலின் தாக்கத்தால் அந்த பிராமணன் மிகுந்த சோர்வுற்றான், தண்ணீர் தாகம் எடுத்தது. அப்போது அங்குள்ள ஒரு கிணற்றை பார்த்தான், மிகுந்த சந்தோஷத்துடன் தண்ணீர் இறைக்கலாம் என்று நினைத்த போது, கிணற்றில் இருந்து "உதவி" "உதவி" என்று ஒரு அபயக் குரல் கேட்டது. பிராமணன் கிணற்றில் எட்டிப் பார்த்தான், ஒரு அணில் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது. பிராமணனை பார்த்ததும், எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள், இந்த உலகத்திலேயே சிறந்த பருப்பு மற்றும் பழ வகைகளை உங்களுக்கு தருகிறேன் என்றது அந்த அணில். பிராமணனும் அந்த அணிலை காப்பாற்றி, பருப்பு மற்றும் பழங்களை பெற்றுக்கொண்டு, தன் தாகத்தையும் தனித்து கொண்டு, பயணத்தை தொடர்ந்தான்.

சிறிது தூரம் சென்றதும், ஒரு ஓநாய் வேடனின் வலையில் சிக்கி இருப்பதை பார்த்தான். அந்த ஓநாய் பிராமணனை பார்த்ததும், என்னை காப்பாற்றுங்கள், நீங்கள் இதுவரை பார்தேயிராத அற்புதமான் ஆடைகளை உங்களுக்கு அளிக்கிறேன் என்றது. சற்று பயந்த பிராமணன், பின்பு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த ஓநாயை விடுவித்து, அந்த அற்புதமான ஆடைகளை பெற்றுக்கொண்டு தன் பயணத்தை தொடர்ந்தான்.

காட்டின் எல்லையை கடக்கு தருவாயில், ஒரு புலியின் உறுமல் கேட்டது. உடனே ஓட்டம் பிடிக்கலாம் என எத்தனித்தவன், என்னவாக இருக்கும் என்ற தெரிந்து கொள்ளும் ஆவல் உந்த, மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்தான், அங்கே ஒரு மரத்தடியில், ஒரு புலி கண்களை மூடி தியானம் செய்து கொண்டிருப்பதை பார்த்தான். அந்த புலியின் காலடியில் ஒரு பெரிய் தங்க வளையல் கிடப்பதையும் கவனித்தான்.

அந்த புலி, ஒற்றை கண்ணை மட்டும் திறந்து, ஓ பிராமணனே, நான் அசைவம் சாப்பிடுவதை விடுத்து, சைவத்திற்கு மாறி எப்பொழுதும் தியான நிலையிலேயே இருக்க முடிவு செய்து விட்டேன். இனி இந்த தniங்கத்தின் மீதெல்லாம் எனக்கு பற்றில்லை, எனவே இந்த தங்க வளையலை நீயே எடுத்துக்கொள் என்றது.

பிராமணனுக்கு கிலி பிடித்துக் கொண்டது, இருந்தாலும் தங்கமாயிற்றே!!! தவிர புலியம் சைவமாக மாறி விட்டேன் என்கிறது, எனவே புலியின் வார்த்தைளை நம்பி, புலிக்கு அருகில் சென்று அந்த தங்க வளையலை எடுக்க முயன்றான், அடுத்த நொடி, புலி அவனை அடித்து கொன்று தனக்கு இரையாக்கி கொண்டது.

நெறி – பேராசை பெரு நஷ்டம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!!!

நன்றி ; நடராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...