இளைஞர்கள் விரும்பும் தலைவர்தான் பிரதமர் வேட்பாளர்

இளைஞர்கள் விரும்பும் தலைவர்தான் பிரதமர் வேட்பாளர் இளைஞர்கள் விரும்பும் தலைவர்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது ; தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவைசாகுபடியை தொடங்க விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர்திறந்துவிட கர்நாக அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன்பாக மத்திய நீர்வளத் துறை செயலர் தலைமையில் இடைக்கால அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இந்த குழுவால் நடத்தப்பட்ட இரண்டுஅமர்விலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என கர்நாடகம் ஒரேமாதிரியான பதிலை தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு, தமிழக காங்கிரஸ் அழுத்தம்கொடுக்க வேண்டும்.இல்லையெனில் அடுத்த மக்களவை தேர்தலில் தமிழககாங்கிரஸ் அதற்கான விலையை கொடுக்கவேண்டியிருக்கும்.கூட்டணி கட்சிகளின் பலம் அல்லது எதிர்கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்திதான் வளரவேண்டிய அவசியம் பா.ஜ.க.,வுக்கு இல்லை. பா.ஜ.க.,வின் பலத்தைதான் பிற கட்சிகள் நம்பியுள்ளன.

பிரதமர் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு திறமையான பலதலைவர்கள் பா.ஜ.க.,வில் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தியை விட்டால் வேறுவேட்பாளர் இல்லை. இதனால்தான் பாஜகவை எதிர்கட்சிகளும், ஊடகங்களும் தொடர்ந்து விமர்சனம்செய்கின்றனர்.அத்வானி ராஜினாமா விஷயத்தை ஊடகம்தான் பெரிதுபடுத்துகின்றனர். பா.ஜ.க.,வை பொருத்தவரை, இளைஞர்கள் விருப்ப கூடியவராகவும், இன்றைய அரசியலுக்கு பொருத்தமானவராகவும், வளர்ச்சியில் பற்று கொண்டவராகவும் உள்ள தலைவர்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...