நரேந்திர மோடிக்கு உள்ள செல்வாக்கே காங்கிரஸ்ஸின் கலக்கத்துக்கு காரணம்

 நரேந்திர மோடிக்கு உள்ள செல்வாக்கே காங்கிரஸ்ஸின் கலக்கத்துக்கு காரணம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியதால் பா.ஜ.க.,வுக்கு எந்தபாதிப்பும் இல்லை என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறியதால் பா.ஜ.க.,வுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது.

பாஜகவின் பிரசாரக் குழு தலைவராக நரேந்திரமோடி நியமிக்கப்பட்டது கட்சியின் உள்விவகாரம். ஒருகட்சியின் உள் விவகாரங்களில் மற்றகட்சிகள் தலையிட முடியாது. நரேந்திரமோடி நாடு முழுவதும் பிரபலமான தலைவர். அவருக்கு மக்களிடம் மிகுந்தசெல்வாக்கு உள்ளது. அதனால் தான் அவரைக்கண்டு காங்கிரஸ் உள்ளிட்டகட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

2004-இல் வாஜ்பாய் அரசு பதவியி லிருந்து வெளியேறும் போது, நாட்டின் ஒட்டுமொத்தவளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது. ஆனால், 9 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி அரசில் இது 5சதவீதமாக சரிந்துள்ளது. அது போல, வாஜ்பாய் ஆட்சியில் 4 சதவீதமாக இருந்த பண வீக்கம் இப்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ரூ. 3,63,000 கோடி வட்டிசெலுத்த வேண்டிய அளவுக்கு நாட்டின் கடன்சுமை அதிகரித்துள்ளது.

வாஜ்பாய் ஆட்சியில் அமெரிக்கடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்_ மதிப்பு ரூ.40 முதல் ரூ. 42 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ. 58ஆக அதிகரித்துள்ள து.
எனவே காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ்தோற்பது உறுதி என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...