இஸ்ரத் ஜஹான் விவகாரத்தில் நரேந்திர மோடியை குற்றம்சாட்டுவதே சி.பி.ஐ.,யின் நோக்கம்

 இஸ்ரத்ஜஹான் என்கவுன்ட்டர் விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை குற்றம்சாட்டுவது ஒன்றே சி.பி.ஐ.,யின் நோக்கமாக இருக்கிறது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் (பா.ஜ.க) ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது.

கடந்த 2004-ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த என்கவுன்ட்டரில் பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் லஷ்கர்-இதொய்பா பயங்கர இயக்கத்தைச்சேர்ந்த பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில் அந்த இயக்கத்துக்கு உள்ள தொடர்புகுறித்தும், என்கவுன்ட்டரில் இறந்த இஸ்ரத் ஜஹானுக்கும், ஜாவித்ஷேக், அம்ஜதலி அக்பரலி ராணா மற்றும் சீஷன் ஹோகர் உள்ளிட்டோருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்தும் சி.பி.ஐ தாக்கல்செய்த குற்றப்பத்திரிக்கையில் இடம்பெறவில்லை. இது குறித்து ஏன் சிபிஐ விசாரணை நடத்தவில்லை?

என்கவுன்ட்டரில் இறந்த இஸ்ரத் ஜஹான் மற்றும் ஜாவித்ஷேக் ஆகியோரை தனது இணையதளத்தில் தியாகிகளாக அந்த தீவிரவாத அமைப்பு சித்திரித்துள்ளது.

இது குறித்தெல்லாம் விசாரணை நடத்தாமல், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை மட்டும் குறிவைத்து அவதூறுபரப்பும் செயலில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.

இதற்கு பின்புலமாக காங்கிரஸ் கட்சி உள்ளது. நரேந்திர மோடி மீது களங்கம் கற்பிக்க முயல்கிறது காங்கிரஸ் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...