மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ள நிலையில் அவசரசட்டம் ஏன்?

மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ள நிலையில் அவசரசட்டம் ஏன்? உணவுபாதுகாப்பு அவசர சட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளன. உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அவசரசட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்வழங்கியது.

இந்த அவசரசட்டத்தை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. முக்கியமான திட்டத்தை மசோதாவாக கொண்டு வந்து நிறைவேற்றாமல் அவசரசட்டம் கொண்டுவருவது சரியல்ல என்று ஐக்கிய ஜனதா தளம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா மத்திய அரசின் முடிவு பெரும்வியப்பை தருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த உணவு பாதுகாப்பு சட்டமசோதாவை அவசரசட்டமாக நிறைவேற்றுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ள நிலையில் அவசரசட்டம் கொண்டுவர அவசியம் ஏன்? என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அவசரசட்டத்தை கொண்டு வருவதன் மூலம் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல்நடத்த மத்திய அரசு முயற்சி செய்துவருதாக அவர் குற்றம்சுமத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...