வாஜ்பாயின் வளர்ச்சிதிட்டங்கள்; அத்வானியின் இந்துத்துவம், ஆகிய இரண்டின் கலவையாக, நரேந்திரமோடி விளங்குகிறார்,” என்று , பா.ஜ.க., மூத்த தலைவர் இல. கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், சோமனூரில், பா.ஜ.க , மகளிரணி மாநிலமாநாடு நேற்று நடைபெற்றது . அதில், பங்கேற்ற தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது. இந்தியாவில் பலவளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திய வாஜ்பாய், இந்துத்துவ பிரதிநிதி அத்வானி ஆகிய இருவரின் ஒட்டுமொத்த கலவையாக, பிரதிநிதியாக நரேந்திரமோடி விளங்குகிறார். அதற்காகவே, அவரை வரும் லோக்சபாதேர்தலில் முன்னிறுத்துகிறோம். சிறுபான்மை ஓட்டுக்காகவே கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், பா.ஜ.க.,வை எதிர்க்கின்றன.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை, 4வது வழியில் கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டது. ஆட்சி மாற்றம் வந்தவுடன், திமுக.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலு, அதனை 6வது வழியில்மாற்றினார். அதனால், பாதியோடு நிற்கிறது. திமுக., வை பொறுத்த வரை சேது சமுத்திர திட்டத்தை லாபமாகபார்க்கிறது; ஆனால், நாங்கள் அதை ஸ்ரீ ராமபிரானின் பாலமாக பார்க்கிறோம். அவர்களுக்கு லாபம்முக்கியம்; எங்களுக்கு பாலம்முக்கியம் என்றார்
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.