வாஜ்பாய் , அத்வானியின் கலவையே நரேந்திர மோடி

வாஜ்பாய் , அத்வானியின்  கலவையே நரேந்திர மோடி வாஜ்பாயின் வளர்ச்சிதிட்டங்கள்; அத்வானியின் இந்துத்துவம், ஆகிய இரண்டின் கலவையாக, நரேந்திரமோடி விளங்குகிறார்,” என்று , பா.ஜ.க., மூத்த தலைவர் இல. கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், சோமனூரில், பா.ஜ.க , மகளிரணி மாநிலமாநாடு நேற்று நடைபெற்றது . அதில், பங்கேற்ற தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது. இந்தியாவில் பலவளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திய வாஜ்பாய், இந்துத்துவ பிரதிநிதி அத்வானி ஆகிய இருவரின் ஒட்டுமொத்த கலவையாக, பிரதிநிதியாக நரேந்திரமோடி விளங்குகிறார். அதற்காகவே, அவரை வரும் லோக்சபாதேர்தலில் முன்னிறுத்துகிறோம். சிறுபான்மை ஓட்டுக்காகவே கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், பா.ஜ.க.,வை எதிர்க்கின்றன.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை, 4வது வழியில் கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டது. ஆட்சி மாற்றம் வந்தவுடன், திமுக.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலு, அதனை 6வது வழியில்மாற்றினார். அதனால், பாதியோடு நிற்கிறது. திமுக., வை பொறுத்த வரை சேது சமுத்திர திட்டத்தை லாபமாகபார்க்கிறது; ஆனால், நாங்கள் அதை ஸ்ரீ ராமபிரானின் பாலமாக பார்க்கிறோம். அவர்களுக்கு லாபம்முக்கியம்; எங்களுக்கு பாலம்முக்கியம் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...